அரசு பங்களாவை காலி செய்ய மறுத்த மாஜி அமைச்சருக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு!
டெல்லி: அரசு வீட்டை காலி செய்யாத முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் வீட்டின் மின்சாரம், தண்ணீர் இணைப்பை துண்டித்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சர்களாக இருந்த பலரும் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்யாமல் அடம் பிடித்து வருகின்றனர். இவர்களுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அசருவதாக இல்லை.

இதில் ஒருவர்தான் முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவருமான அஜித் சிங். இவர் டெல்லி துக்ளக் ரோட்டில் உள்ள அரசு குடியிருப்பு பங்களாவில் குடியிருந்து வருகிறார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த அரசு வீடு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பனானந்தா சோனாவாலுக்கு ஒதுக்கபட்டது.
ஆனால் அஜித் சிங் இதுவரை அரசு வீட்டை காலி செய்யவில்லை.இதனால் தற்போதைய மத்திய அமைச்சர் தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளார். பங்களாவை காலி செய்யுமாறு அஜித் சிங்க்கு பல முறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் காலி செய்வதாக தெரியவில்லை. இதையடுத்து போலீஸ் உதவியுடன் கடந்த மாதம் வீட்டை காலி செய்ய அதிகாரிகள் முயன்றனர்.
ஆனால், தகவல் அறிந்து அஜித்சிங்கின் ஆதரவாளர்கள் வந்து முற்றுகையிட்டு வீட்டை காலி செய்ய விடாமல் தடுத்தனர். இந்நிலையில் பங்களாவின் மின்சார, குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். இனியாவது அவர் காலி செய்வாரா அல்லது இன்வென்டர் மற்றும் லாரி தண்ணீரில் வாழ்க்கையை நகர்த்துவாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications