வங்கி ஊழியர்களின் இன்றைய வேலை நிறுத்தம் ஒத்தி வைப்பு!
டெல்லி: பொதுத்துறை வங்கி ஊழியர்களின் இன்றைய ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பொதுத்துறையைச் சேர்ந்த 27 வங்கிகள் உள்ளன. இவற்றில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகளில் பணிபுரியும் 8 லட்சம் ஊழியர்களுக்கான சம்பளம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் திருத்தி அமைக்கப்படவில்லை.

தங்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதனை நிர்வாகத் தரப்பினரான இந்திய வங்கிகள் சங்கத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி முதல் 5-ந்தேதி முடிய வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
இதைத் தொடர்ந்து இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் அமைப்பின் அமைப்பாளர் எம்.வி. முரளி தெரிவித்தார்.
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறும்போது, ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். பேச்சுவார்த்தையின்போது இந்திய வங்கிகள் சங்கத்தினர் அறிவித்த ஊதிய சதவீத உயர்வை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஊதிய உயர்வு சதவீதத்தை இன்னும் அதிகரிக்கும் வரை பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications