ஜாட் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு மீதான இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் ஹரியானா அரசின் முடிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க பஞ்சாப்- ஹரியாணா மாநில உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஹரியாணா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்த்து அரசு வேலை, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க கோரி கடந்த பிப்ரவரி மாதம் ஜாட் இன மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து ஜாட் உள்ளிட்ட 6 சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை ஹரியாணா மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப்- ஹரியாணா மாநில உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த ஜாட் இன மக்கள் விரைவில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரி வந்தனர். ஆனால் நீதிமன்றம் விதித்த தடையை விலக்க அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் ஜாட் இன மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹரியாணா அரசு சார்பில், ஜாட் மக்கள் நடத்தும் போராட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீதிமன்றம் விலக்கிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தவா சவுத்ரி, அருண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒரே நாளில் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடாது. வரும் 10-ந் தேதிக்குள் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் நீதிமன்றத்தில் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வரும் 13-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதனால் ஹரியானாவில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications