"நாங்க ஏன் பிரதர் எல்லாத்தையும் இழந்துட்டதா நினைக்கணும்.. புதுசா ஸ்டார்ட் பண்ணுவோம்".. பூரி மக்கள்
புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி, நகரில் மக்கள் புதிதாக தங்கள் வாழ்க்கைய துவங்கும் மனநிலையுடன் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.
ஒடிசாவில் பனி புயல் காரணமாக பூரி மற்றும் புவனேஸ்வர் உள்ளிட்ட கடற்கரை நகரங்கள் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பூரி நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அடிப்படை வசதிகளை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. மக்கள் நம்பிக்கையுடன் இயல்பு நிலையை நோக்கி நகரத்தொடங்கி உள்ளனர்.

இயல்புநிலை நோக்கி
ஒரு பக்கம் ஃபனி புயல் காரணமாக பூரி நகர் கடற்கரையில் இருந்த ராட்சத விளக்கு சரிந்து விழுந்து கிடந்தது. அதன் பின்னால் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்க்கும் போது, 200 கிலோமீட்டர் வேகத்தில் உக்கிரமாய் பூரி நகரை ஃபனி புயல் சிதைத்துச் சென்ற நிலையில், மெதுவாக இயல்பு நிலையை நோக்கி பூரி நகரை நகர்த்திக் கொண்டிருப்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்தியது. ஓட்டல்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கடற்கரையில் சிதறி கிடந்தன. இவற்றை பார்க்கும் போது குண்டு வெடிப்பில் சிதறிப் போனது போல் தோன்றியது.

தார் சாலைகள்
எப்போதும் பரபரப்பாக காணப்படும பூரின் கடற்கரை கருப்பு வண்ண தார் சாலை முழுவதும் மணலால் மூடி மண்மேடு போல் காணப்படுகிறது. ஆனால் மோசமாக சிதைத் இந்த இயற்கை பேரழிவால் மனிதனின் மனிதநேயத்திற்கு எந்த தடையும் போட முடியவில்லை. அங்கு உள்ள உள்ளூர் மக்கள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரரிகள், இணைந்து செயல்பட்டு பழைய நிலையை மீட்டுக்க ஏற்கனவே இறங்கி விடடார்கள்.

பூரி ஜெகன்நாதர் மண்.
இதுகுறித்து தனது கடைக்காக வைத்திருந்த ஸ்டாலை புயலில் பறிகொடுத்த பூரி நகரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி கூறுகையில், "புயல் கனவு போல் வந்து சென்றுவிட்டது. இந்த மாதிரி மோசமான சம்பவம் நடக்கும்ணு நாங்க நினைக்கவே இல்லை. ஆனால் ஒன்று, இந்த மண். எங்கள் தெய்வம் பூரி ஜெகன்நாதர் மண். அவருடைய ஆசிர்வாதம் இருக்குறதால எல்லாம் நல்லபடியாக மாறும். நாங்க ஏன் பிரதர் எல்லாத்தையும் இழந்துட்டதா நினைக்கணும்.. நாங்க புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்போம்" என்றார்.

இயல்பு நிலை திரும்ப
புயல் குறித்து கல்லூரி மாணவர் சன்ங்ராம் சிங் கூறுகையில், " நம்பிக்கை இருந்த போதிலும் பூரி நகர்ல உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சரியாவதற்கு மாதக்கணக்கில் ஆகும். அதன் பிறகே சுற்றுலா பயணிகள் பூரிக்கு வருவார்கள். எனினும் நான் எனது சுற்றுலா டிரப்பை கேன்சல் செய்யவில்லை. பாலசோரில் இருந்து பூரிக்கு நான் வந்திருக்கிறேன்" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications