சீர்திருத்தங்களை தடுக்காதீர்கள்.. ராகுலை சந்தித்து வேண்டுகோள் விடுத்த தொழிலதிபர்கள்
டெல்லி: பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான சட்ட மசோதாக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் சிலர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

ஆட்சியில் உள்ளவர்கள், அமைச்சர்களை சந்தித்து தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை தொழிலதிபர்கள் முன்வைப்பது காலம்காலமாக நடைமுறையிலுள்ள வழக்கம். ஆனால், அரிதான நிகழ்வாக, தொழிலதிபர்கள் சிலர் எதிர்க்கட்சி வரிசையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து இதுபோன்ற ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
டெல்லியிலுள்ள ராகுல் காந்தி இல்லத்தில் சுமார் 10 தொழிலதிபர்கள், அவருடன் சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல்காந்தியும் இதை தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் உடனிருந்தார்.
Had a fruitful discussion with top foreign institutional investors yesterday on state of the economy&its priorities pic.twitter.com/ZCVNaIcBgT
— Office of RG (@OfficeOfRG) November 20, 2015 இதுகுறித்து காங். நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜி.எஸ்.டி வரி சட்டத்தை கிடப்பில் போடும்வகையில் நாடாளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் செயல்பட கூடாது என்று, தொழிலதிபர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதற்கு, ஜி.எஸ்.டி சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் 3 வருடங்கள் முன்பே அறிமுகம் செய்தது. எனவே, அதை முடக்க காங்கிரஸ் நினைக்கவில்லை. ஆனால், ஏழைகள் நலன் பாதிக்காத அளவில் சட்டம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்". இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications