3வது அணிக்கு ஆதரவு அளிக்காமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர ராகுல் திட்டம்!
டெல்லி: தேர்தலில் காங்கிரசால் தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டால், மூன்றாம் அணிக்கு ஆதரவு அளிப்பதைவிட, எதிர்க்கட்சி வரிசையில் உட்காரவே ராகுல்காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூழ்குவது உறுதி
நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்று கருத்துக் கணிப்புகள் உறுதிபட கூறிவருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவர்களில் பலருக்கு 3 இலக்க சீட்டுகளைக்கூட வெல்லப் போவதில்லை என்ற அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பாஜகவுக்கு டிமிக்கி
காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மூன்றாம் அணியிலுள்ள கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாதி போன்றவற்றுடன் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கலாம் என்பது சல்மான் குர்ஷித் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பலரின் திட்டமாக உள்ளது. இதன்மூலம் பாஜகவை ஆட்சியமைக்கவிடாமல் தடுத்துவிடலாம் என்பது இவர்கள் நோக்கம்.

நிலையற்ற தன்மை
ஆனால் மூன்றாம் அணியுடன் இணைந்தோ, அல்லது மூன்றாம் அணிக்கு ஆதரவு அளித்தோ ஒரு மத்திய அரசை அமைத்தால் அது எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்று ராகுல்காந்தி நினைக்கிறாராம். இந்திய அரசியல் வரலாற்றில் அதுபோன்ற உதாரணங்கள் பல இருப்பதை ராகுல் கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளார்.

கட்சியை வளர்க்கலாம்
எப்போது கவிழுமோ என்ற திக்..திக்குடன் இருப்பதற்கு பதிலாக எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் அமருவது நல்லது. இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்பு ஏற்படும் என்பது ராகுல் எண்ணம். குறிப்பாக பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து மாநில கட்சிகள் வளர்ச்சி பெற்றுள்ளது குறித்து கவலையடைந்துள்ள ராகுல்காந்தி இந்த ஐந்தாண்டு காலத்தை கட்சியை வளர்ப்பதில் செலவிடுவது நீண்ட காலத்துக்கு நல்லது என யோசிக்கிறார்.

ஒத்துக்க மாட்டாங்களே..
தேர்தலுக்கு பிந்தைய காங்கிரிசின் நிலைப்பாடு பற்றி அகமதுபட்டேல், ஜெய்ராம்ரமேஷ், திக்விஜய்சிங் போன்ற கட்சி தலைவர்களிடம் கேட்டால், காங்கிரஸ் கூட்டணிதானே வெற்றி பெறப்போகிறது, பிறகு எதற்கு நாங்கள் மூன்றாவது அணி பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications