ராஜஸ்தானில் செம்ம ட்விஸ்ட்-அசோக் கெலாட் கோஷ்டி 82 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மேலிடம் அதிரடி நோட்டீஸ்?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவு 82 எம்.எல்.ஏக்கல் மீது காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் அசோக் கெலாட் ஆதரவு 82 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கமல்நாத், திக்விஜய்சிங் உள்ளிட்டோரும் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்பது பொதுவான கருத்து. காங்கிரஸ் மேலிடமும் தற்போது வர அசோக் கெலாட்டையே ஆதரித்து வருகிறது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகளால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அசோக் கெலாட்- பைலட்டுக்கு எதிர்ப்பு
அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவரானால் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார்? என்பதுதான் பிரச்சனை. ராஜஸ்தானில் ஏற்கனவே காங்கிரஸில் 18 எம்.எல்.ஏக்களுடன் போர்க்கொடி தூக்கியவர் சச்சின் பைலட். இதனால் சச்சின் பைலட் அடுத்த முதல்வராகக் கூடும் என கருதப்பட்டது. ஆனால் அசோக் கெலாட் இப்போதும் சச்சின் பைலட்டுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார். தாம் காங்கிரஸ் தலைவரானால் ராஜஸ்தான் முதல்வராக சபாநாயகர் சிபி ஜோஷியை நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்தார் கெலாட்.

82 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
இப்பிரச்சனை குறித்து மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கேசி வேணுகோபால் புதிய மேலிடப் பார்வையாளராக ராஜஸ்தானுக்கு அனுப்ப ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் போர்க்கொடி தூக்கி இருக்கிற 82 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நோட்டீஸ் அனுப்பும் மேலிடம்
இப்பிரச்சனை குறித்து மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கேசி வேணுகோபால் புதிய மேலிடப் பார்வையாளராக ராஜஸ்தானுக்கு அனுப்ப ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் போர்க்கொடி தூக்கி இருக்கிற 82 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சச்சின் பைலட் நிலைப்பாடு
இதனிடையே ஜெய்ப்பூரில்தான் சச்சின் பைலட் முகாமிட்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதனை ஏற்க தயாராக இருக்கிறேன். நான் டெல்லி செல்லவில்லை என கூறியிருக்கிறார். ராஜஸ்தான் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள குழப்பம் அக்கட்சி மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications