பிரதமர் தொகுதியில் பெண்களுக்கு பாதுக்காப்பில்லையா? பொங்கி எழுந்த பாஜக..கடும் அமளி..பரபரத்த ராஜஸ்தான்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர் : பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என ராஜஸ்தான் மாநில அமைச்சர் கூறியதாக கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.

இன்று காவல் மற்றும் சிறை துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் சாந்தி குமார் தரிவால் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்தார்.

பாஜக குறித்து விமர்சனம்

பாஜக குறித்து விமர்சனம்

தனது பேச்சின் இடையே உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து மக்களின் கவனத்தை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால் கூறினார். மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.

வாரணாசி தொகுதி

வாரணாசி தொகுதி

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நாடாளு மன்ற தொகுதியான உத்தரப் பிரதேசம் வாரநாசி நாடாளுமன்றத் தொகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது எனவும் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தாலும் முதல் தகவல் அறிக்கை கூட செய்யமாட்டார்கள் காவல்துறையினர் என குற்றம்சாட்டினார்.

கடும் அமளி

கடும் அமளி

அமைச்சர் சாந்தி குமார் தாரிவாலின் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவான நிலையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கும் ராஜேந்திரா கூறும்போது, அமைச்சர்கள் இதுபோன்ற பொருத்தமில்லாத எதிர்வினையாற்றும் கருத்துக்களை கேட்பதற்காக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்றார்.

சகிப்புதன்மை இல்லை

சகிப்புதன்மை இல்லை


அதே நேரத்தில் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக பாஜக உறுப்பினர்கள் உள்ளனர் எனவும் அவர்களால் விமர்சனங்களை எப்போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என அமைச்சர் தாரிவால் கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் தான் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+