பழைய பால் கவர் கொடுத்தால்.. பெட்ரோல், டீசல் விலையில் தள்ளுபடி.. ராஜஸ்தானில் சூப்பர் ஆஃபர்!
பழைய காலி பால் பாக்கெட்டுகளுக்கு பெட்ரோல் விலையில் தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது ராஜஸ்தானில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்று.
ஜெய்ப்பூர்: காலி பால் பாக்கெட்டுகள் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால், பெட்ரோல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ராஜஸ்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம்.
பெண்கள் தினமும் தங்கம் விலை நிலவரத்தை ஆர்வமாகப் பார்ப்பது போல, ஆண்கள் பெட்ரோல், டீசல் விலையைப் பார்த்து வருகின்றனர். வண்டியை விற்றுத்தான் பெட்ரோல் போட வேண்டும் போல என வாகன ஓட்டிகளே நொந்து கொள்ளும் அளவிற்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனாலேயே ஆடி மாதம் துணிக்கடைகளில் தள்ளுபடி போடுவது போல, பெட்ரோல் நிலையத்தில் யாராவது தள்ளுபடி தர மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்நிலையில், வாகன ஓட்டிகளின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல், ராஜஸ்தானில் இயங்கி வரும் பெட்ரோல் நிலையம் ஒன்று அதிரடியாக தள்ளுபடி ஒன்றை அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை தள்ளுபடி
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் இயங்கி வருகிறது இந்த பெட்ரோல் நிலையம். அசோக் குமார் முந்த்ரா என்பவர் நடத்தி வரும் இந்த பெட்ரோல் நிலையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு முகாம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் விலையில் தள்ளுபடியை அறிவித்துள்ளார் அசோக்குமார்.

பால் பாக்கெட்
அதாவது, காலி பால் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும் என அசோக்குமார் தெரிவித்துள்ளார். ஒரு காலி பால் பாக்கெட் அல்லது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் பெட்ரோல் விலையில் 1 ரூபாயும், டீசல் விலையில் 50 பைசாவும் தள்ளுபடி வழங்கப்படும். சராஸ் டய்ரி நிறுவனம், பில்வாரா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியுடன் அசோக்குமார் இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளார்.

700 காலி பாக்கெட்டுகள்
காலி பால் பாக்கெட்டுகள் அரை லிட்டர் என்றால் இரண்டும், ஒரு லிட்டர் என்றால் ஒன்றும், காலி தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் அளவுள்ளதிற்கும் இந்தத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சேகரிக்கப்படும், காலி பால் பாக்கெட்டுகளை சராஸ் டய்ரி நிறுவனம் பெற்றுக்கொள்கிறது. இதுவரை சுமார் 700 காலி பால் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கும் பாதிப்பு
"பிளாஸ்டிக் மற்றும் பாலீதீன் பைகளால் ஏற்படும் தீமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முகாமை அமைத்துள்ளோம். இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தள்ளுபடியை மூன்று மாத காலத்திற்கு அளிக்க இருக்கிறோம். பில்வாராவை பாலீதீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்குவதே எனது கனவு. ஏனென்றால் பிளாஸ்டிக் மற்றும் பாலீதீன் பைகளால் சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படுவதோடு, நாய், பசு போன்ற கால்நடைகளின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது" என்கிறார் அசோக்குமார்.
-
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
பட்ஜெட்டில் துண்டு போடும் பெட்ரோல் விலை.. இந்தியாவிலேயே உச்சம் எங்கு தெரியுமா? சென்னைக்கு எந்த இடம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications