வசதிபடைத்தவர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள்- இது சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
அமராவதி: மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறி வரும் நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வசதிபடைத்த தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடா நகரில் மாநில அரசு மற்றும் யுனிசெப் உதவியுடன் குழந்தைகள் சத்துணவு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:
ஆந்திராவில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு காரணம் வசதிபடைத்தோர் தான். வசதிபடைத்த தம்பதிகள் ஒரு குழந்தை போதும் அல்லது குழந்தையே தேவையில்லை என்ற கொள்கையை பின்பற்றுகின்றனர். ஆனால் ஏழை மக்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டது. தற்போது அதை கைவிடுவது என முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் தொகையை அதிகரிக்க முடியும்.
தற்போது, ஜப்பான், சீனாவை போன்று இந்தியாவிலும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் தான் இந்தியாவின் எதிர்கால சொத்துக்கள். இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பணக்காரர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களால் சத்தான உணவை குழந்தைகளுக்கு வழங்க முடியும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications