மானை வேட்டையாடிய சல்'மான்' வழக்கில் பிப்ரவரி 25ம் தேதி தீர்ப்பு!
ஜோத்பூர்: ராஜஸ்தானில் மான் வேட்டை நடத்தியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 25 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த 1998 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சினிமா படப்பிடிப்பிற்கு சென்ற பாலிவுட் நடிகர் சல்மான்கான் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியால் பிளாக்பக் வகை மானை வேட்டையாடினார்.

இதையடுத்து சட்ட விரோதமாக மானை வேட்டையாடிய அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 16 வருடங்களாக நடந்து வருகிறது.
கடந்த 5 ஆம் தேதி நடந்த இவ்வழக்கு விசாரணையின்போது காலாவதியான துப்பாக்கி லைசென்ஸ் உரிமத்தினை வைத்து அவர் வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அனுபமா பிஜிலானி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications