ஆமா.. சி.ஏ.ஏ.வை நடைமுறைப்படுத்த முடியாது என மாநிலங்கள் சொல்ல முடியாது... சல்மான் குர்ஷித்தும் ஆதரவு
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) நடைமுறைப்படுத்த முடியாது என மாநிலங்கள் கூற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் தெரிவித்துள்ளதற்கு மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதேபோல் பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசும் சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மேலும் கேரளாவைப் போல உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பேசியதாவது:
Recommended Video
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். மீது அதிருப்தி இருந்தால் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் தெரியப்படுத்தலாம். இதில் என்.ஆர்.சி. என்பது மாநில அரசு அதிகாரிகளால் செயல்படுத்தக் கூடியது.
மாநில அரசு அதிகாரிகளை மத்திய அரசுடன் இணைந்து செயல்படக் கூடாது என சொல்வது சாத்தியம் அல்லாதது. அதேபோல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அமல்படுத்த முடியாது என மாநிலங்கள் அவ்வளவு எளிதாக சொல்லவும் முடியாது.
சி.ஏ.ஏ.வை எதிர்த்து மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற உரிமை உண்டு. ஆனால் நடைமுறைப்படுத்த முடியாது என கூற இயலாது. இவ்வாறு கபில்சிபல் கூறியுள்ளார்.
இதனிடையே கபில்சிபலின் கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித்தும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாதவரை சட்டத்தை மதித்துதான் நடப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இல்லையெனில் மாநில அரசுகள் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என கூறியுள்ளார்.
-
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications