பரப்பன அக்ரஹார சிறையையே போயஸ் தோட்டமாக மாற்றிய சசிகலா
பரப்பன அக்ரஹார சிறையில் ராஜவாழ்க்கைை வாழ்ந்து வருகிறார் சசிகலா என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தனது பணப் பலத்தை வைத்து ஒரு மினி ராஜ்ஜியத்தையே சசிகலா நடத்தி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1991-96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சொத்துக்களை குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்படி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.

சிறை சென்றதும் பேன் வசதி
சிறைக்கு சென்றதும் அவர் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவருக்கு நாற்காலி, பேன் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டன. நாளடைவில் மேலும் சில வசதிகளும் கிடைத்துள்ளது.

பணப்பலத்தை வைத்து...
சசிகலா தன்னிடம் உள்ள பணத்தை வைத்து சிறையில் வாழ்ந்தாலும் ஒரு ராஜபோக வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார். இவருக்கு அளிக்கப்படும் விஐபி உபசரிப்பு குறித்து கர்நாடகா மாநில டிஐஜி ரூபா, மாநில டிஜிபி தத்தாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தனி சமையறை
சிறையில் சசிகலாவுக்கென்று தனி சமையறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு வசதிகளுக்காக சிறை துறை அதிகாரிகளுக்காக அவர் ரூ. 2 கோடி வரை பணம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சிறையில் உள்ள கைதிகளை இத்தனை முறை, இத்தனை மணிக்குள்தான் பார்க்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

விதிகளையும் வளைத்தார்
விதிகளெல்லாம் மற்ற கைதிகளுக்குதான், தனக்கில்லை என்பது போல் அவரை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்துவிட்டு சென்றுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் பார்வையாளர் நேரத்தை கடந்து 5 மணிக்கு மேல் பார்த்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல்.

போயஸ் தோட்டம்
ஜெயிலில் தண்டனை பெற்றாலும் அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் வசிப்பது போன்றே வசித்து வருகிறார். இதற்காக அவர் தரப்பில் பணம் தண்ணீராக செலவு செய்யப்படுகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications