பரப்பன அக்ரஹார சிறையையே போயஸ் தோட்டமாக மாற்றிய சசிகலா
பரப்பன அக்ரஹார சிறையில் ராஜவாழ்க்கைை வாழ்ந்து வருகிறார் சசிகலா என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தனது பணப் பலத்தை வைத்து ஒரு மினி ராஜ்ஜியத்தையே சசிகலா நடத்தி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1991-96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சொத்துக்களை குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்படி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.

சிறை சென்றதும் பேன் வசதி
சிறைக்கு சென்றதும் அவர் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவருக்கு நாற்காலி, பேன் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டன. நாளடைவில் மேலும் சில வசதிகளும் கிடைத்துள்ளது.

பணப்பலத்தை வைத்து...
சசிகலா தன்னிடம் உள்ள பணத்தை வைத்து சிறையில் வாழ்ந்தாலும் ஒரு ராஜபோக வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார். இவருக்கு அளிக்கப்படும் விஐபி உபசரிப்பு குறித்து கர்நாடகா மாநில டிஐஜி ரூபா, மாநில டிஜிபி தத்தாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தனி சமையறை
சிறையில் சசிகலாவுக்கென்று தனி சமையறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு வசதிகளுக்காக சிறை துறை அதிகாரிகளுக்காக அவர் ரூ. 2 கோடி வரை பணம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சிறையில் உள்ள கைதிகளை இத்தனை முறை, இத்தனை மணிக்குள்தான் பார்க்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

விதிகளையும் வளைத்தார்
விதிகளெல்லாம் மற்ற கைதிகளுக்குதான், தனக்கில்லை என்பது போல் அவரை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்துவிட்டு சென்றுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் பார்வையாளர் நேரத்தை கடந்து 5 மணிக்கு மேல் பார்த்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல்.

போயஸ் தோட்டம்
ஜெயிலில் தண்டனை பெற்றாலும் அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் வசிப்பது போன்றே வசித்து வருகிறார். இதற்காக அவர் தரப்பில் பணம் தண்ணீராக செலவு செய்யப்படுகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications