எஸ்.பி.ஐ.யின் முட்டாள்தனத்தால் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான வீட்டு வேலைக்காரப் பெண்!
கான்பூர்: ஆயிரம் ரூபாய் நோட்டை எதிர்பாராதவிதமாக கண்ணில் பார்த்தாலே நமக்கு அடடா என்று ஆச்சரியம் மேலோங்கும்.. அதுவே ஆயிரக்கணக்கான கோடி பணத்தை இந்தா பிடி என்று கையில் திணித்தால் மாரடைப்பே வந்து விடும் அல்லவா.. அப்படித்தான் நடந்துள்ளது கான்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முட்டாள்தனமான ஒரு காரியத்தால் அந்தப் பெண்ணின் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரம் கோடி பணம் கணக்கி் சேர்ந்து அவரை அதிர வைத்துள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் ஊர்மிளா யாதவ். இவருக்கு கான்பூர் விகாஸ் நகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் கணக்கு உள்ளது.

அப்படியே ஷாக் ஆயிட்டேன்...
சில நாட்களுக்கு முன்பு தனது வங்கிக்குச் சென்று கணக்கை அப்டேட் செய்து பார்த்த ஊர்மிளாவுக்கு அதிர்ச்சியி்ல் மயக்கம் வராத குறை. காரணம், அவரது வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ. 95 ஆயிரத்து 71 கோடியே 16 லட்சத்து 98 ஆயிரத்து 647 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது.
ஜன் தன் யோஜனா...
சாதாரண வீட்டு வேலை பார்க்கும் பெண் ஊர்மிளா. ரூ. 2000 மினிமம் பேலன்ஸ் போட்டு கணக்கைத் தொடங்கியிருந்தார் ஊர்மிளா. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த கணக்கு தொடங்கப்பட்டது.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...
இதையடுத்து முதலில் அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் ரூ. 9,99,999 உங்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அடுத்து இன்னொரு மெசேஜ் வந்தது. அதில் ரூ. 9.97 லட்சம் கணக்கு வைக்கப்பட்டதாக கூறியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ரூ. 95 ஆயிரம் கோடி சொச்சம்...
ஆனால் இதை விட பெரிய அதிர்ச்சி அவரது வங்கிக் கிளைக்குப் போனபோது ஏற்பட்டது. தனக்கு கணக்கு தொடங்க உதவிய லால்தா பிரசாத் திவாரி என்பவருடன் வங்கிக் கிளையில் போய் விசாரித்தபோது அங்கு கணக்கை பரிசோதித்தபோது அவரது கணக்கில் ரூ. 95 ஆயிரம் கோடி சொச்சம் பாக்கி இருப்பதாக தெரிய வந்து மேலும் அதிர்ச்சி ஏற்பட்டது.
முட்டாள்தனமான வேலை...
வங்கி அதிகாரிகளும் இப்போது அதிர்ச்சியில் மூழ்கினர். உடனடியாக மேலாளர் உள்ளிட்டோர் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் விசாரணைக்குப் பின்னர்தான் நடந்தது வேண்டும் என்றே வங்கித் தரப்பில் செய்யப்பட்ட ஒரு முட்டாள்தனமான வேலை என்று தெரிய வந்தது.
வங்கியின் உக்தி...
அதாவது ஊர்மிளாவின் வங்கிக் கணக்கு சில காலமாக முடங்கிப் போயிருந்தது. அவர் செயல்படுத்தாமல் விட்டு வைத்திருந்தார். இதுபோன்ற கணக்குகளை நிரந்தரமாக மூட வங்கி சார்பில் ஒரு உத்தியைக் கையாளுகிறார்களாம். அதாவது பெரிய தொகையை அந்தக் கணக்குக்கு டிரான்ஸ்பர் செய்து, அதை உடனடியாக எடுத்து விட்டு கணக்கை முடித்து விடுவார்களாம்.
மறதி...
இதுபோலத்தான் ஊர்மிளா கணக்கில் பெரிய தொகையை ஏற்றியுள்ளனர். ஆனால் அதை எடுக்க மறந்து விட்டனர். இதனால்தான் குழப்பமாகியுள்ளது.
விசாரணை தேவை...
இதுகுறித்து அபிஷேக் குப்தா என்ற ஆடிட்டர் கூறுகையில், "வங்கி விதிமுறைகளின்படி இப்படி கணக்கு வைத்திருப்போருக்குத் தெரியாமல் அவரது கணக்கில் யாரும் பணத்தை ஏற்றவோ, எடுக்கவோ முடியாது. இது சட்டவிரோதமான செயல். நடந்த தவறுக்கு வங்கிதான் முழுப் பொறுப்பாகும். இப்படிச் செய்வதில் எந்த வகையில் அறிவார்ந்த செயல் என்று தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.
ரூ. 2000 போதும்...
ஊர்மிளாவுக்கோ வேறு கவலை. "எனது கணக்கில் என்ன நடந்தது என்பது குறித்து எனக்குக் கவலை இல்லை. நான் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் ரூ. 2000 பத்திரமாக இருந்தால் எனக்குப் போதும்" என்கிறார் அவர்.
குழப்பம் தீர்ந்தது...
அவரது கவலையை உடனடியாக வங்கி போக்கி விட்டது. தற்போது அவரது கணக்கு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. பேலன்ஸ் தொகை ரூ. 2000 என்று காட்டுகிறதாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications