மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகளுக்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: இறைச்சிக்காக கால்நடைகளை விற்கக் கூடாது என்ற மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
மாமிசத்துக்காக மாடு, எருது, ஒட்டகம், கன்றுக் குட்டி உள்ளிட்ட கால்நடைகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை கடந்த மாதம் விதித்தது. மேலும் மாட்டிறைச்சிக்கும் தடை விதித்தது. இதனால் கேரளா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மேலும் மத்திய அரசின் கட்டுப்பாடுகளை திரும்ப பெறக் கோரியும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. மாடுகளை விற்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் மாடு வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பால் கறக்க முடியாத மாடுகள்
மேலும் தீவனத்தின் விலையும் அதிகம் என்பதால் பால் கறக்க முடியாத மாடுகளை விற்பனைக்கு கொடுக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். இது அடிதட்டு மக்களின் பிரச்சினை என்பதால் இந்த புதிய கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
அந்த வழக்குகள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாடு விற்பனையில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவே இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும், இது சாதாரண மாடு விற்பனையாளருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் வாதிட்டார்.

மாட்டு நலன் பாதுகாக்கப்படுகிறது
மாடுகளை விற்க பெயர், முகவரி, அடையாள அட்டை ஆகியவை சமர்ப்பித்து புதிதாக அமைக்கப்பட்ட குழுவிடம் கையெழுத்து வாங்கி மாடு விற்பதன் மூலம் அதன் நலன் பாதுகாக்கப்படுகிறது என்றும் வாதிட்டார்.

இடைக்காலத் தடை கிடையாது
இதையடுத்து நீதிமன்றம் உத்தரவிடுகையில், மாடு விற்பனைக்கு விதித்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு 3 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் என்று கூறி மத்திய அரசின் கட்டுப்பாடுகளுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications