ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்துவது குறித்து மத்திய அரசு பதில் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்துவது குறித்து மத்திய அரசு பதில் தர என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்துவது குறித்து மத்திய அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் ஒரு லட்சம் பேர் அகதிகளாக வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தில் தஞ்சமடைந்த 40,000 ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications