விளக்கம் அளிக்க மறுக்கும் சென்னை ஐ.ஐ.டிக்கு தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் கடும் வார்னிங்!
டெல்லி: அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு ஏற்கனவே அனுப்பிய நோட்டீசுக்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால் சம்மன் அனுப்ப நேரிடும் என்றும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததாக கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் மாணவர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் சார்பில் அதன் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யான பி.எல்.புனியா தன்னிச்சையாக விளக்கம் கேட்டு சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடந்த மாதம் 30-ந்தேதி நோட்டீசு அனுப்பியிருந்தார்.
அதில் ஜூன் 1-ந்தேதிக்குள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து விளக்கம் அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நோட்டீசு மீது எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் நேற்று மீண்டும் சென்னை ஐ.ஐ.டிக்கு ஒரு நோட்டீசு தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் அனுப்பி உள்ளது.
அதில், ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் கோரியுள்ள விளக்கத்தை உடனடியாக அனுப்பாவிட்டால் சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நேரிடும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கும் இதே போல் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications