கொரோனாவை தொடர்ந்து.. உ.பி.யை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்.. 5 குழந்தைகள் உயிரிழப்பு!
மதுரா : உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பல மாநிலங்களில் கொரோனா குறைந்து விட்டாலும் கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று குறையவில்லை.
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் முந்தைய அலையை விட அதிகமாக இருக்கும் குறிப்பாக குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மர்ம காய்ச்சல்
கொரோனாவே முழுமையாக அழியாத நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் மதுராவின் கோன் கிராமத்தில் கடந்த வாரம் முதல் பரவிய மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரா, ஆக்ரா மற்றும் ராஜஸ்தானின் பரத்பூரில் கூட மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

மாதிரிகள் சேகரிப்பு
இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மொத்தம் 80 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் மதுராவின் கோன் கிராமத்திற்குச் சென்று மலேரியா, டெங்கு மற்றும் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் மாதிரிகள் எடுத்தனர்.

டெங்கு காய்ச்சலா?
இந்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகளின் இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, டெங்கு காய்ச்சலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ துறை அதிகாரிகள் கூறினர். ஆனாலும் அது உறுதியாக தெரியவில்லை.

மக்களுக்கு அறிவுறுத்தல்
இது தொடர்பாக மதுரா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரச்சனா குப்தா கூறுகையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுத்து சோதனை செய்து வருகிறோம். கிராமத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளோம். சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க மக்களை அறிவுறுத்தி இருக்கிறோம். காய்ச்சல் அல்லது அது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications