கொரோனாவை தொடர்ந்து.. உ.பி.யை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்.. 5 குழந்தைகள் உயிரிழப்பு!
மதுரா : உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பல மாநிலங்களில் கொரோனா குறைந்து விட்டாலும் கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று குறையவில்லை.
கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் முந்தைய அலையை விட அதிகமாக இருக்கும் குறிப்பாக குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மர்ம காய்ச்சல்
கொரோனாவே முழுமையாக அழியாத நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் மதுராவின் கோன் கிராமத்தில் கடந்த வாரம் முதல் பரவிய மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரா, ஆக்ரா மற்றும் ராஜஸ்தானின் பரத்பூரில் கூட மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

மாதிரிகள் சேகரிப்பு
இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மொத்தம் 80 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் மதுராவின் கோன் கிராமத்திற்குச் சென்று மலேரியா, டெங்கு மற்றும் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் மாதிரிகள் எடுத்தனர்.

டெங்கு காய்ச்சலா?
இந்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகளின் இறப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, டெங்கு காய்ச்சலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ துறை அதிகாரிகள் கூறினர். ஆனாலும் அது உறுதியாக தெரியவில்லை.

மக்களுக்கு அறிவுறுத்தல்
இது தொடர்பாக மதுரா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரச்சனா குப்தா கூறுகையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுத்து சோதனை செய்து வருகிறோம். கிராமத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளோம். சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க மக்களை அறிவுறுத்தி இருக்கிறோம். காய்ச்சல் அல்லது அது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications