இந்தியாவின் மதிப்பை சிதைக்க சிலர் முயற்சி...அரசியல் கட்சிகள் காரணம்...மோடி தாக்கு
திஷ்பூர் : இந்தியாவின் மதிப்பை சிதைக்க வெளியில் இருந்து சிலர் முயற்சி செய்கிறார்கள். இதற்கு பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளன என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி இன்று சுற்றுபயணம் செய்தார். அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் அசோம் மாலா திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டம் அசாமின் சாலை உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

திட்டங்களை துவக்கி வைத்த பிறகு பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, சமீப நாட்களாக நாட்டிற்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நாட்டிற்கு வெளியில் இருந்து சிலர் இந்தியாவில் மதிப்பை சிதைக்க முயற்சிப்பதற்கான சில ஆவணங்கள் வெளியாகி உள்ளன. இதற்கு விளக்கம் சொல்ல முயற்சிக்கும் சில அரசியல் கட்சிகள் இதன் பின்னணியில் உள்ளன.
உதாரணமாக இந்திய டீ. இந்த சதித் திட்டத்திற்கு ஒவ்வொரு தேயிலை தோட்டம், ஒவ்வொரு தேயிலை தொழிலாளர்களுக்கும் அந்த அரசியல் கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என்றார். முன்னதாக ட்விட்டரிலும் தனது அசாம் பயணம் குறித்து மோடி பதிவிட்டிருந்தார்.
மேலும் மோடி கூறுகையில், அசோம் மாலா, தேசிய பாரத்மாலா திட்டத்துடன் இணைக்கப்படும். இது 500 மாவட்டங்களை இணைக்கக் கூடியது. இதனால் நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் இணைக்கப்படும். இந்த திட்டம் தனித்துவம் வாய்ந்தது என மோடி தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications