உ.பியில் பயங்கரம்... சமாஜ்வாடி கவுன்சிலர் அதுல் யாதவ் பன்டு சரமாரியாக சுடப்பட்டார்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி கவுன்சிலர் அதுல் யாதவ் பன்டு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நர்ஹி வார்டு கவுன்சிலர் அதுல் யாதவ் பன்டு. ஆளும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அவர் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 42 வயதான யாதவ் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யாதவை சுட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications