உடுப்பி கிருஷ்ணர் கோயில் நிர்வாகத்தை ஏற்ற பெஜாவர் மடம்! விழாவில் அத்வானி,சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
உடுப்பி: சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயில் நிர்வாக பொறுப்பை 5வது முறையாக இன்று பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி ஏற்றுக்கொண்டார். மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கய்யநாயுடு, உமாபாரதி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலை நிர்வகித்து, பக்தர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட நிர்வாக பொறுப்பு 2 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. மொத்தம் 8 மடங்கள் இந்த நிர்வாகத்தை சுழற்சி முறையில் நடத்துகின்றன.

கடந்த 2 வருடங்களாக, காணியூர் மடாதிபதி வித்யா வல்லப சுவாமிஜி பொறுப்பில் இருந்த நிர்வாகம், இன்று பெஜாவர் மடத்தின் அதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளிடம் வழங்கப்பட்டது. சுழற்சி முறையில், விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிஜி தற்போது 5வது முறையாக இந்த பொறுப்பை வகிக்கிறார்.

இந்த விழாவையொட்டி, இன்று அதிகாலை 1.30 மணி முதல் 5.30 மணிவரை உடுப்பி நகரமெங்கும் பெரும் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பல்லக்கு ஊர்வலங்கள், அலங்கார வளைவுகள் என நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

காணியூர் மடாதிபதியிடமிருந்து (மத்துவாச்சாரியார் வழங்கியது) அக்ஷய பாத்திரத்தை விஸ்வேஸ்வர சுவாமிஜி வாங்கிக்கொண்டு முறைப்படி நிர்வாகத்தை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, சதானந்தகவுடா, உமா பாரதி, அனந்த்குமார் உள்ளிட்டோரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பல பிரபலங்களும் உடுப்பி வந்திருந்தனர்.

தமிழக அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் என குறிப்பிட்டு, அவரும் விழாவில் பங்கேற்க வருவதாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், பன்னீர்செல்வம் விழாவில் பங்கேற்க வரவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications