3-ஆவது முறையாக திருப்பதிக்கு வந்த சிறிசேனா... நாளை காலை சுவாமி தரிசனம்
ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்துள்ளார் இலங்கை அதிபர் சிறிசேனா.
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இன்று திருப்பதிக்கு இலங்கை அதிபர் சிறிசேனா வந்தடைந்தார்.
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அதிபராக பதவியேற்ற பின்னர் மூன்றாவது முறையாக இன்று திருப்பதிக்கு சென்றுள்ளார். பாதுகாப்பு காரணமாக இலங்கையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து கார் மூலமாக சித்தூர் வழியாக திருப்பதி வந்தடைந்துள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாவட்ட போலீஸாரும் வரவேற்றனர்.

அதிபர் வந்த சில நிமிடத்தில் ஆளில்லா பறக்கும் கேமரா அங்கு பறந்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பக்தர்களும் வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து போலீசார் விசாரணை செய்ததில் வனத்துறை சார்பில் தோட்டத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆளில்லாத கேமரா மூலம் புகைப்படம் எடுத்ததாக தகவல் வெளிவந்தது.
நாளை காலை சுவாமி தரிசனம் செய்யவுள்ள அவரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, ஏழுமலையானின் பிரசாதம், 2018-ஆம் ஆண்டின் நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருஉருவப்படத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்குகிறார்கள். அதன் பின்னர் அவர் இலங்கைக்கு செல்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications