உங்கள் டுவீட்டுகள் தாளமுடியாத வலியை தருகின்றன- சுஷ்மா ஸ்வராஜின் கணவர் உருக்கம்
உங்கள் டுவீட்டுகள் தாளமுடியாத வலியை தருகின்றன என்று சுஷ்மா ஸ்வராஜின் கணவர் உருக்கமாக தெரிவித்தார்.
Recommended Video

டெல்லி: உங்கள் டுவீட்டுகள் தாள முடியாத வலியை எங்கள் குடும்பத்திற்கு தருகின்றன என்று சுஷ்மா ஸ்வராஜின் கணவர் உருக்கமாக தெரிவித்தார்.
கடந்த 20-ஆம் தேதி லக்னோவில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு ஒரு தம்பதி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் கணவர் முஸ்லிம், மனைவி இந்து சமூகத்தினர் ஆவர். அப்போது அங்கிருந்த அதிகாரி விகாஸ் மிஷ்ரா, கணவரை இந்து மதத்துக்கு மாறுங்கள் என்றும் இல்லாவிட்டால் மனைவியாவது முஸ்லிம் சமூகத்திற்கு மாறுங்கள் என்றும் கலப்பு திருமண தம்பதிக்கு பாஸ்போர்ட் கொடுக்க இயலாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்துக்கு எட்டியது. இதையடுத்து விகாஷ் மிஸ்ராவை லக்னோவிலிருந்து கோரக்பூருக்கு பணியிடமாற்றம் செய்துவிட்டார்.

டுவிட்டரில் வாக்குப் பதிவு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் சுஷ்மாவை வறுத்தெடுக்கின்றனர். மேலும் மிஸ்ரா தனது கடமையைதானே செய்தார், அவரை ஏன் பணியிட மாற்றம் செய்தீர்கள் என்று கேட்கத் தொடங்கினர். இது தொடர்பாக சுஷ்மா, டுவிட்டரில் வாக்குப் பதிவையும் நடத்தினார்.

ஆமாம்
சிலர் சுஷ்மாவை திட்டியும் உள்ளனர். அந்த பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்த சுஷ்மா ஸ்வராஜ் இதுபோன்ற டுவீட்டுகளை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு 57 சதவீத பேர் இல்லை என்றும் 47 சதவீதம் பேர் ஆமாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடிக்க வேண்டியதுதானே
டெல்லி ஐஐடியில் படித்த முகேஷ் குப்தா என்பவர் தனது டிரோலில் சுஷ்மாவை அடிக்குமாறும், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் செயலில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்துமாறும் சுஷ்மா கணவர் கௌசலிடம் கேட்டுக் கொண்டார்.

தாளமுடியாத வலி
இதை பார்த்த கணவர் கௌஷால் அவரை நாங்கள் பெருமிதமாக கருதுகிறோம். அவரை பார்த்து அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சட்டம் மற்றும் அரசியலில் நாங்கள் முதல் தலைமுறையினர். அவரது ஆயுளை தவிர நாங்கள் வேறு எதையும் பிரார்த்திக்கவில்லை.இதுபோன்ற வார்த்தைகளால் தாளமுடியாத வலியில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications