மீண்டும் முதல்வராக இப்போது ஜெயலலிதாவுக்கு உரிமை கிடைத்துள்ளது - சாமி சொல்கிறார்!
டெல்லி: ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி தருகிறது. இருப்பினும் இதை எதிர்த்து நானாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர மாட்டேன் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
அதேசமயம், கர்நாடக அரசுத் தரப்பில் அப்பீல் செய்தால் அவர்களுக்கு தான் உதவி செய்வேன் என்று சாமி தெரிவித்துள்ளார். மேலும் எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு யோசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து சாமி கருத்து தெரிவிக்கையில், இந்த தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது. இருப்பினும் ஜெயலலிதாவை எதிர்த்து நான் உச்சநீதிமன்றம் போகப் போவதில்லை. அதேசமயம், கர்நாடக அரசுத் தரப்பில் அப்பீல் செய்தால் அவர்களுக்கு முழு உதவியாக இருப்பேன்.
தீர்ப்பு முழுவிவரம் குறித்து எனக்குத் தெரியவில்லை. தீர்ப்பை முழுமையாக படிப்பேன். அதற்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன். எந்த முடிவாக இருந்தாலும் அது ஆகஸ்ட்டுக்குப் பிறகே இருக்கும் என்றும் சாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பை முதலில் வெளிக் கொணர்ந்தவர் சாமிதான். பின்னர் இந்த வழக்கில் ஆரம்பம் முதலே அவர் அரசுத் தரப்பு உதவி செய்தும் வந்தார். இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் மனுதாரரே சாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமி வெளியிட்டுள்ள இன்னொரு டிவிட்டில், இந்தத் தீர்ப்பின் மூலம் மீண்டும் முதல்வர் பதவியை வகிக்க ஜெயலலிதாவுக்கு உரிமை கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications