சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் என்.ஜி.ஓ.க்கு வெளிநாட்டு நிதி- சி.பி.ஐ. விசாரணை?
டெல்லி: சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கூடும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செதல்வாட், 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர். மத்தியில் பாரதிய ஜனதா அரசு பதவியேற்ற பின்னர் இந்தியாவில் செயல்படும் என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங்க் கம்யூனிகேஷன்ஸ் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் மத்திய அரசின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி உதவியை இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு டீஸ்டாவின் சப்ரங் நிறுவனம் பயன்படுத்தியதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டி விசாரணை நடத்தி வருகிறது. இது அப்பட்டமான சட்டவிரோதம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது தொடர்பாக டீஸ்டாவின் சப்ரங் நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே சில கேள்விகளை கேட்டு நோட்டீஸும் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சப்ரங் நிறுவனத்துக்கு கிடைத்த வெளிநாட்டு நிதி உதவி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications