மதசார்பற்றதன்மை இல்லாமல் இந்தியாவே கிடையாது: சோனியா காந்தி தாக்கு
டெல்லி: மதசார்பற்றதன்மை இல்லாமல் இந்தியாவே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மறைமுகமாக பாஜகவை தாக்கி பேசினார்.
நாட்டின் முதலாவது பிரதமர் நேருவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் 2 நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாஜக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளுக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு நேரு பிறந்தநாள் விழாக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த எவருமே இடம்பெறவில்லை. இதன் காரணமாக நேரு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதில் மத்திய அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்றும், இன்றும் நடைபெற்றுவரும் இம் மாநாட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெறாத அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: மதசார்பற்றதன்மை இன்றி இந்தியா கிடையாது. இந்தியா போன்ற பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாட்டில் மதசார்பற்ற தன்மை என்பது மிகவும் அவசியம். மதசார்பற்றதன்மை மீது நேரு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்படுமானால் தனது இறுதி மூச்சு போகும் வரை போராடுவேன் என்று நேரு முன்பு ஒருமுறை கூறியுள்ளார். நேரு குறித்த வரலாறு, சமீபமாக மறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக அவர் குறித்த எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
நவீன இந்தியாவை உருவாக்குவதில் நேரு சிற்பியாக செயல்பட்டார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி அதை வலிமையடையச் செய்தது நேருதான். நேருவின் உழைப்பால்தான் நாம் இப்போது பலனை அனுபவித்து வருகிறோம். அறிவார்ந்த ஒரு சமூகத்தையும், சமூக அக்கறையும் கொண்ட மனிதர்களாக இந்தியர்களை மாற்றியதில் நேருவின் பங்களிப்பு அதிகம். இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications