மதசார்பற்றதன்மை இல்லாமல் இந்தியாவே கிடையாது: சோனியா காந்தி தாக்கு
டெல்லி: மதசார்பற்றதன்மை இல்லாமல் இந்தியாவே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மறைமுகமாக பாஜகவை தாக்கி பேசினார்.
நாட்டின் முதலாவது பிரதமர் நேருவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் 2 நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாஜக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளுக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு நேரு பிறந்தநாள் விழாக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த எவருமே இடம்பெறவில்லை. இதன் காரணமாக நேரு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதில் மத்திய அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்றும், இன்றும் நடைபெற்றுவரும் இம் மாநாட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெறாத அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: மதசார்பற்றதன்மை இன்றி இந்தியா கிடையாது. இந்தியா போன்ற பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாட்டில் மதசார்பற்ற தன்மை என்பது மிகவும் அவசியம். மதசார்பற்றதன்மை மீது நேரு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். மதசார்பற்ற தன்மைக்கு ஆபத்து ஏற்படுமானால் தனது இறுதி மூச்சு போகும் வரை போராடுவேன் என்று நேரு முன்பு ஒருமுறை கூறியுள்ளார். நேரு குறித்த வரலாறு, சமீபமாக மறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக அவர் குறித்த எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
நவீன இந்தியாவை உருவாக்குவதில் நேரு சிற்பியாக செயல்பட்டார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி அதை வலிமையடையச் செய்தது நேருதான். நேருவின் உழைப்பால்தான் நாம் இப்போது பலனை அனுபவித்து வருகிறோம். அறிவார்ந்த ஒரு சமூகத்தையும், சமூக அக்கறையும் கொண்ட மனிதர்களாக இந்தியர்களை மாற்றியதில் நேருவின் பங்களிப்பு அதிகம். இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications