என்.டி.ஆர் மகன் குடும்பத்திற்கு சோதனை மேல் சோதனை.. ஒரே மாவட்டத்தில் 10 வருடத்திற்குள் 3வது விபத்து
Recommended Video

ஹைதராபாத்: என்.டி.ஆர் மகன் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, கார் விபத்தில் நேற்று பலியானார். நல்கொண்டா மாவட்டத்தில் விபத்து நடந்துள்ளது. இந்த மாவட்டத்தில், இவர் குடும்பத்தார் விபத்தில் சிக்குவது இது மூன்றாவது முறை. இருமுறை உயிர்கள் பறிபோயுள்ளன. ஒருமுறை படுகாய சம்பவம் நிகழ்ந்தது.
பிரபல நடிகரும், ஹரிகிருஷ்ணா மகனுமான ஜூனியர் என்டிஆர், 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி, இதே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். சூர்யாபேட் அருகே ஜூனியர் என்டிஆர் பயணித்த எஸ்யூவி வகை கார் பல்டியடித்தது. இதில் ஜூனியர் என்டிஆரின் முதுகு தண்டுவடத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டன. தலை மற்றும் கைகளிலும் அடிபட்டது. கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு குணமடைந்தார்.

2014ம் ஆண்டு, டிசம்பர் 6ம் தேதி, ஹரிகிருஷ்ணாவின் மற்றொரு மகன் ஜானகிராம், பயணித்த டாடா சபாரி கார், ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் சென்றபோது, நல்கொண்டா மாவட்டத்திற்குள், தவறான திசையில் எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் ஜானகிராம் பலியானார்.
இந்த நிலையில், நல்கொண்டா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை கார், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அதை ஓட்டிச் சென்ற ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். ஹைதராபாத்திலிருந்து, நெல்லூர் நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. இம்மாவட்டம் முன்பு ஆந்திராவில் இருந்தது. தற்போது அது தெலுங்கானா மாநிலமாகும்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும்கூட, அந்த மாவட்டத்திற்கும், என்டிஆர் குடும்பத்திற்கும் ஏனோ ராசியின்மை தொடருவதாக கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications