ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் தற்கொலைக்கு ஜாதி சாயம் பூசுவதா? ஸ்மிருதி இரானி கோபம்
டெல்லி: ஹைதராபாத்தில் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்த விவகாரத்தை தலித் முத்திரை குத்தி ஜாதி பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில், பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி நிர்வாகிகளை தாக்கியதாக அம்பேத்கர் மாணவர் அமைப்பை சேர்ந்த ரோகித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், ரோகித் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரத்தை தலித் மாணவர் தற்கொலை என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் அணுகிவரும் நிலையில், அவ்வாறான போக்கு சரியில்லை என்று ஸ்மிருதி இரானி இன்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஜாதி பிரச்சினையாக மாற்ற யாரும் முயல வேண்டாம். ரோகித்தை சஸ்பெண்ட் செய்த வார்டனும் தலித் பிரிவை சேரந்தவர்தான்.
மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது நியாயமான நடவடிக்கை என பல்கலைக்கழகம் கூறுகிறது. எனவேதான், சஸ்பெண்ட் தண்டனையை எதிர்த்து, மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. ரோகித் தனது தற்கொலை கடிதத்தில் கூட, யாரையும் குற்றம் சாட்டவில்லை.
செகந்திராபாத் பாஜக எம்.பியும் அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், எனவே அவரையும் குற்றவாளியாக கருதி பதவியிலிருந்து விலக்குமாறும் காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஹனுமந்தராவ் இதுபோன்ற கடிதங்களை ஏற்கனவே எழுதியுள்ளார். ஹைதராபாத் பல்கலையில் நடைபெறும் முறைகேடுகளை அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications