டிக்கெட் பரிசோதகர் அட்டகாசம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளி விட்ட கொடூரம்
மால்டா: மேற்குவங்க மாநிலத்தில், டிக்கெட் பரிசோதகர் ஒருவர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்ததற்காக ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் மால்டா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி ரயிலில் வகிபூல் பீபீ (வயது35) என்ற பெண்மணி தனது மகளுடன் பயணம் செய்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அவர்கள் பயணம் செய்வதாக கூறி அபராத கட்டணமாக ரூ.550ஐ கட்டும்படி கூறி இருக்கிறார்.
அவ்வளவு பணம் இல்லாததால் அபராதக் கட்டணமாக ரூ.150ஐ மட்டும் செலுத்துவதாக அந்த பெண் டிக்கெட் பரிசோதகரிடம் கூறி இருக்கிறார். ஆனால் பேசிக்கொண்டிருக்கும் போதே சற்றும் எதிர்பாராத நிலையில், டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், ஏக் லக்கி என்ற ரயில் நிலையத்தை சூறையாடினர். இதனால், ரயில் போக்குவரத்து சுமார் ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications