பத்ம விருதுகளில் சாமியார்கள், வெளிநாட்டவர் ஆதிக்கம் -தமிழகத்திற்கு நிறைய ஏமாற்றம்
டெல்லி: 2015ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில் தமிழகத்திற்கு இந்த முறை நிறைய ஏமாற்றம் அடங்கியுள்ளது. மிகவும் பிரபலமானவர் என்றால் கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் பெயர் மட்டுமே உள்ளது. மற்றபடி எதிர்பார்த்தது போல சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம் பெறவில்லை.
பாரத ரத்னாவுக்கு அடுத்த உயரிய சிவில் விருது பத்ம விருதுகளாகும். பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இது வழங்கப்படுகிறது.
கலை, சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் பொறியியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படும். தனியாக விழா நடத்தி விருதுகள் வழங்கப்படும்.

104 பேருக்கு விருதுகள்
இந்த ஆண்டு மொத்தம் 104 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 9 பேருக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு பத்மபூஷணும், 75 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

17 பெண்கள்
104 பேரில் 17 பேர் பெண்கள் ஆவர். 17 பேர் வெளிநாட்டவர், என்ஆர்ஐ ஆவர். 4 பேருக்கு மறைவுக்குப் பிந்தையதாக விருது அளிக்கப்படுகிறது.

சாமியார்கள் -துறவிகள்
இந்த விருதுகளில் இந்த முறை சாமியார்கள், துறவிகள் சற்று அதிகம் காணப்படுகின்றனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெகத்குரு ரமணாந்தாச்சார்யா சுவாமி ராமபத்ராச்சார்யாவுக்கு பத்மவிபூஷண் வழங்கப்படுகிறது. சுவாமி சத்யமித்ரானந்த் கிரிக்கு பத்மபூஷணும், ஜெதக்குரு அம்ரதா சூர்யானந்த் மகாராஜுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பில் கேட்ஸ் - மனைவி மெலின்டா கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா கேட்ஸ் ஆகியோருக்கும் பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மங்கள்யான் திட்ட இயக்குநர் அருணன்
மங்கள்யான் திட்ட இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த அருணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கர்நாடக பிரிவிலிருந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திற்கு ஏமாற்றம்
இந்த முறை விருதுகளில் தமிழகத்திற்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது தரப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை.

6 பேருக்கு மட்டுமே
தமிழகத்திலிருந்து 6 பேருக்கு மட்டுமே விருதுகள் கிடைத்துள்ளன. அதில் பத்மவிபூஷண் விருது பேராசிரியர் மாலூர் ராமசாமி சீனிவாசனுக்கு அறிவியல், பொறியியல் பிரிவில் கிடைத்துள்ளது. சிவில் சர்வீஸ் பிரிவில் என்.கோபாலசாமி, கலைப் பிரிவில் சுதா ரகுநாதன் ஆகியோருக்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ளது. கன்யாகுமரி அவசரளாவுக்கு கலைப் பிரிவில் பத்மபூஷண் விருது கிடைத்துள்ளது. சிவில் சர்வீஸ் பிரிவில் பி.வி.ராஜாராமன் மற்றும் மறைந்த ஆர். வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. அருணன் கர்நாடகத்திலிருந்து விருது பெறுகிறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications