ஒரே தண்டவாளத்தில் நேருக்குநேர் வந்த இரு ரயில்கள்: கொல்கத்தாவில் பெரும் விபத்து தவிர்ப்பு
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று எதிர்பாராத விதமாக இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போதும், ரயில் ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கொல்கத்தா, சீல்டா ரயில் நிலையத்தின் 7-வது பிளாட்பாரத்தில் இருந்து நேற்று காலை 8.10 மணிக்கு புறப்பட்ட சீல்டா-லால்கோலா பயணிகள் ரயில், வெளியில் செல்வதற்கான சிக்னல் விழுவதற்குள் 8.17க்கு மெயின் தண்டவாளத்திற்குச் சென்றுவிட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக போங்கான்-சீல்டா ரயில், அதே தண்டவாளத்தில் எதிரே வந்தது.
இதனைக் கவனித்த சீல்டா-லால்கோலா ரயில் டிரைவர், உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு ரயிலை உடனடியாக நிறுத்தினார். இரு ரயில்களும் மெதுவாக வந்ததால் உடனடியாக ரயிலை நிறுத்த முடிந்தது.
அதனைத் தொடர்ந்து, சில்டா-லால்கோலா ரயிலை பின்னோக்கி செலுத்தினார் அதன் டிரைவர். இதனால், மீண்டும் 7-வது பிளாட்பாரத்தில் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றது ரயில். அதன்பின்னர், எதிரில் வந்த போங்காந் சீல்டா ரயிலும் பாதுகாப்பாக அதன் பாதையில் வந்து சேர்ந்தது.
நேருக்கு நேர் மோதவிருந்த ரயில்கள் டிரைவர்களின் நிதானத்தால் பாதுகாப்பாக நின்றன. நடக்கவிருந்த பெரும் விபத்தும், உயிரிழப்புகளும் மயிரிழையில் தவிர்க்கப்பட்டதால், பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
எனினும், கவனக் குறைவாக ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்த முற்பட்டதாக சீல்டா-லால்கோலா ரயில் டிரைவர், உதவி டிரைவர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பரபரப்புச் சம்பவங்களுக்குப் பிறகு, நிறுத்தப்பட்டிருந்த சீல்டா-லால்கோலா ரயில் மிகவும் தாமதமாக, அதாவது 9.32க்கு புதிய டிரைவர், உதவி டிரைவர் மற்றும் கார்டு ஆகியோருடன் புறப்பட்டு சென்றது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications