கோடிக்கணக்கில் டாய்லெட்டை கட்டும் பாஜக அரசு.. ஆனால் பயன்படுத்துவோர் எங்கே?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சுத்தமான இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் உரம் மற்றும் தானியங்களை சேமித்து வைக்கும் அறைகளாக மாறியுள்ளன.
பிரதமர் மோடி சுத்தமான இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் 2 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்ட பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின்படி கழிப்பறை வேண்டும் என்று கேட்பவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பல கழிப்பறைகள் தானியம் மற்றும் உரங்களை சேமித்து வைக்கும் அறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் வழக்கம் போன்று திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தற்போது பாஜக அரசு கட்டியுள்ள கழிப்பறைகள் பார்க்க நன்றாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பலருக்கு திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் ஏற்படும் விபரீதங்கள் தெரியாததால் அவர்கள் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டும் அவற்றை பயன்படுத்தாமல் உள்ளனர்.
அரசு கொடுக்கும் அழுத்தத்தால் கிராமத்து பஞ்சாயத்து தலைவர்கள் கழிப்பறைகளை கட்டுவதில் காட்டும் வேகத்தை அதை பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்துவதில் காட்டுவது இல்லை. கேட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் இது குறித்து மக்களிடையே விளக்கிக் கூற எங்களுக்கு நேரமில்லை என்கிறார்கள் பஞ்சாயத்து தலைவர்கள்.
சுத்தமான இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான கழிப்பறைகளில் பல பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications