மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: 23 பேருக்கு தண்டனை விதித்த சிபிஐ கோர்ட்
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 23 பேருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்தபோது பல கோடி ரூபாய் அளவுக்கு மாட்டுத் தீவன ஊழல் நடைபெற்றது. இது குறித்த வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குடன் தொடர்புடைய அதாவது 1981ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை டொரன்டா கருவூலத்தில் இருந்து ரூ.7.06 கோடி முறைகேடாக எடுத்த வழக்கு உத்தரகண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்ந வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 பேரை விடுவித்தது. மேலும் 23 பேருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தும், ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.
பீகாரில் இருந்து ஜார்க்கண்ட் தனி மாநிலமாக பிரியும் முன்பு 1996ம் ஆண்டு இந்த மாட்டுத் தீவன ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் தனி மாநிலமாக்கப்பட்டபோது மாட்டுத் தீவன ஊழல் குறித்த 54 வழக்குகள் இங்கு மாற்றப்பட்டன.
பல சிபிஐ நீதிமன்றங்கள் மாட்டுத் தீவன ஊழல் குறித்த 47 வழக்குகளுக்கு இதுவரை தீர்ப்பளித்துள்ளன. அதில் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் 5 வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications