நாளை மறுநாளைக்குள் நீதிபதிகளுக்குள் கருத்தொற்றுமை: அட்டார்னி ஜெனரல் வேணுகோபால்
திங்களன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் ஒற்றுமை ஏற்படும் எனஅட்டார்னி ஜெனரல் கே.கேவேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் வரும்திங்கட்கிழமை அன்றுகருத்து ஒற்றுமை ஏற்படும் என்று அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்மேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன்கோகாய், மதன்லோகூர்உள்ளிட்ட நான்குபேர்பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்றும், தலைமைநீதிபதி பாராபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது மத்திய அரசு மற்றும் நீதித்துறை அமைச்சகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.
பூதாகரமாக வெடிக்கப்பட்ட இந்தவிவகாரம் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அமுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அட்டார்னி ஜெனரல், வரும் திங்கட்கிழமை அன்று கருத்து வேறுபாடு உள்ள அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒன்றாக இணைவார்கள் என்று தெரிவித்தார்.
அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த நீதிபதிகள் இப்பிரச்சனையை மேலும் வளர்க்க மாட்டார்கள் என்றுதாம் நம்புவதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை அதிருப்தியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்குபேரையும் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா சந்திப்பார் என்றும் கருதப்படுகிறது.
வழக்குகளை ஒதுக்குவதில் மிகுந்த பாராபட்சம் காட்டப்படுவது தான் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது இருக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications