நாளை மறுநாளைக்குள் நீதிபதிகளுக்குள் கருத்தொற்றுமை: அட்டார்னி ஜெனரல் வேணுகோபால்
திங்களன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் ஒற்றுமை ஏற்படும் எனஅட்டார்னி ஜெனரல் கே.கேவேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் வரும்திங்கட்கிழமை அன்றுகருத்து ஒற்றுமை ஏற்படும் என்று அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்மேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன்கோகாய், மதன்லோகூர்உள்ளிட்ட நான்குபேர்பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்றும், தலைமைநீதிபதி பாராபட்சமாக நடந்துக் கொள்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளே குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது மத்திய அரசு மற்றும் நீதித்துறை அமைச்சகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.
பூதாகரமாக வெடிக்கப்பட்ட இந்தவிவகாரம் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அமுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அட்டார்னி ஜெனரல், வரும் திங்கட்கிழமை அன்று கருத்து வேறுபாடு உள்ள அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒன்றாக இணைவார்கள் என்று தெரிவித்தார்.
அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த நீதிபதிகள் இப்பிரச்சனையை மேலும் வளர்க்க மாட்டார்கள் என்றுதாம் நம்புவதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை அதிருப்தியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்குபேரையும் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா சந்திப்பார் என்றும் கருதப்படுகிறது.
வழக்குகளை ஒதுக்குவதில் மிகுந்த பாராபட்சம் காட்டப்படுவது தான் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது இருக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications