மார்க் ஜுக்கர்பர்குக்கு சம்மன் அனுப்புவோம்.. அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை
இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் பேஸ்புக் நிறுவனம் யாருக்கும் கொடுக்க கூடாது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கு எச்சர
Recommended Video

டெல்லி: இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் பேஸ்புக் நிறுவனம் யாருக்கும் கொடுக்க கூடாது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்திய பயனாளிகளின் தகவலும் திருடப்பட்டு இருக்கலாம் என்று பயம் நிலவுகிறது.
இந்த நிலையில் பேஸ்புக்கின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை மிகவும் பாதுகாப்பாக கவனமாக கண்காணிக்கப்படுகிறது என்றுள்ளார்.
மேலும் ''இந்தியர்களின் தகவல்களை திருடுவது குறித்து பேஸ்புக் நிறுவனம் சிந்திக்கவே கூடாது. தகவல் தொழில்நுட்ப துறையில் நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம். ஏதாவது பிரச்சனை நடந்தால் மார்க் ஜுக்கர்பர்குக்கு சம்மன் அனுப்ப கூட தயாராக இருக்கிறோம்'' என்றுள்ளார்.
-
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
எடப்பாடி பழனிசாமி பட்ட பாடெல்லாம் போச்சா? தவெக மூலம் தொங்கு சட்டசபை? கிங் மேக்கர் ஆக துடிக்கும் பாஜக -
118-க்கு செக் வைக்கும் பாஜகவின் 130 கணக்கு! ஒரே கல்லில் 2 மாங்கா.. அதிமுகவுக்கு ஆப்பு வைக்குதா தாமரை -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு?












Click it and Unblock the Notifications