மார்க் ஜுக்கர்பர்குக்கு சம்மன் அனுப்புவோம்.. அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை
இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் பேஸ்புக் நிறுவனம் யாருக்கும் கொடுக்க கூடாது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கு எச்சர
Recommended Video

டெல்லி: இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் மக்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் பேஸ்புக் நிறுவனம் யாருக்கும் கொடுக்க கூடாது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்திய பயனாளிகளின் தகவலும் திருடப்பட்டு இருக்கலாம் என்று பயம் நிலவுகிறது.
இந்த நிலையில் பேஸ்புக்கின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை மிகவும் பாதுகாப்பாக கவனமாக கண்காணிக்கப்படுகிறது என்றுள்ளார்.
மேலும் ''இந்தியர்களின் தகவல்களை திருடுவது குறித்து பேஸ்புக் நிறுவனம் சிந்திக்கவே கூடாது. தகவல் தொழில்நுட்ப துறையில் நாங்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம். ஏதாவது பிரச்சனை நடந்தால் மார்க் ஜுக்கர்பர்குக்கு சம்மன் அனுப்ப கூட தயாராக இருக்கிறோம்'' என்றுள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications