தென் இந்தியாவுக்கும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்துக்கும் ஏன் கனெக்ஷன் போட்டார் மத்திய அமைச்சர்?
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தென் இந்தியாவை குறிவைப்பதாக பலமுறை உளவுத்துறை எச்சரித்தும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில்தான், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு அதேபோன்ற ஒரு கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை கடிதங்களை கொடுத்தும்கூட, எந்த அரசும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக தமிழகத்தில், சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக கொண்டு, தீவிரவாத இயக்கங்கள் தலை தூக்குகின்றன.

அல்-உம்மா தொடர்பு
அல்-உம்மா அதுபோன்ற ஒரு குரூப். அரசியல் கொலைகள், இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலைகள், தீவிரவாத செயல்களில் இவ்வமைப்புக்கு தொடர்புள்ளது. அத்வானி தமிழகம் வந்தபோது, குண்டு வைக்க முயன்றது அல்-உம்மா. பெங்களூரில் பாஜக அலுவலகத்துக்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பிலும் அல்-உம்மாவுக்கு தொடர்புள்ளது.

முதல் இந்தியர்
யதேர்ச்சையாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த, முதல் இந்தியரே தமிழகத்தை சேர்ந்தவர்தான். அவர் பெயர் காஜா பக்ருதின். சமூக வலைத்தளங்களில் காட்சியளித்த, ஐஎஸ்ஐஎஸ் டி-சட்டை அணிந்த இளைஞர்கள், சிலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இலங்கை வாலிபர் கைது
தமிழகத்தில் மும்பை பாணியில் ஒரு தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முயன்றது. கொழும்பில் இருந்து ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டார். இவற்றுக்கெல்லாம் பிறகும் இன்னும் தமிழகம் முழு முயற்சி எடுக்கவில்லை.

பிற மாநிலங்கள்
கர்நாடகாவில், மங்களூர், பத்கல் போன்ற பகுதிகளும், தெலுங்கானாவில் ஹைதராபாத் பகுதியும் தீவிரவாத நடவடிக்கை கொண்டதாக மாறிவருகிறது. கேரளாவுக்கும், அரபு நாடுகளுக்கும் உள்ள தொடர்பு, தீவிரவாதத்துக்கு ஒரு வகையில் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications