ரவிசங்கர் பிரசாத் இலாகா பறிப்புக்கு காரணம் ஜெ.வுடனான சந்திப்பா?
டெல்லி: மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் இலாகா மாற்றத்துக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்புதான் காரணம் என்றும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதான் இந்த இலாகா மாற்றத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த ஞாயிறன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்துடன் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.
சட்டம், நீதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்து சட்டம், நீதித்துறை பறிக்கப்பட்டது. அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மட்டும் இருக்கிறார்.

ரயில்வே அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். ரவிசங்கர் பிரசாத்தின் இலாகா பறிப்புக்கு அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக செப்டம்பர் 20-ந் தேதியன்று ஜெயலலிதாவை ரவிசங்கர் பிரசாத் சந்தித்து பேசினார்.
இதற்கு அப்போதே சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவுடனான ரவிசங்கர் பிரசாத்தின் சந்திப்பால் ஊழல்வாதிகளை நாம் காப்பாற்றுகிறோமா என்ற சந்தேகம் பொதுமக்களிடத்தில் எழுந்துள்ளதாக நரேந்திர மோடியிடம் சுப்பிரமணியன் சுவாமி புகாரும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் ரவிசங்கர் பிரசாத் மீது அதிருப்தி அடைந்திருந்த பிரதமர் மோடி, அமைச்சரவை மாற்றத்தின் போது அவரது வசம் இருந்த சட்டம், நீதி துறைகளை பறித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் நீதித்துறையில் கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் கர்நாடகாவைச் சேர்ந்த சதானந்தா கவுடாவுக்கு சட்டம், நீதித்துறை ஒதுக்கப்பட்டதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications