ரவிசங்கர் பிரசாத் இலாகா பறிப்புக்கு காரணம் ஜெ.வுடனான சந்திப்பா?
டெல்லி: மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் இலாகா மாற்றத்துக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்புதான் காரணம் என்றும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதான் இந்த இலாகா மாற்றத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த ஞாயிறன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்துடன் சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.
சட்டம், நீதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்து சட்டம், நீதித்துறை பறிக்கப்பட்டது. அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மட்டும் இருக்கிறார்.

ரயில்வே அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். ரவிசங்கர் பிரசாத்தின் இலாகா பறிப்புக்கு அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்ததுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதாவது ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக செப்டம்பர் 20-ந் தேதியன்று ஜெயலலிதாவை ரவிசங்கர் பிரசாத் சந்தித்து பேசினார்.
இதற்கு அப்போதே சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவுடனான ரவிசங்கர் பிரசாத்தின் சந்திப்பால் ஊழல்வாதிகளை நாம் காப்பாற்றுகிறோமா என்ற சந்தேகம் பொதுமக்களிடத்தில் எழுந்துள்ளதாக நரேந்திர மோடியிடம் சுப்பிரமணியன் சுவாமி புகாரும் தெரிவித்திருக்கிறார்.
இதனால் ரவிசங்கர் பிரசாத் மீது அதிருப்தி அடைந்திருந்த பிரதமர் மோடி, அமைச்சரவை மாற்றத்தின் போது அவரது வசம் இருந்த சட்டம், நீதி துறைகளை பறித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் நீதித்துறையில் கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் கர்நாடகாவைச் சேர்ந்த சதானந்தா கவுடாவுக்கு சட்டம், நீதித்துறை ஒதுக்கப்பட்டதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications