உயர் ஜாதியினருக்கு பதிலடி.. தனி நபராக கிணறு தோண்டி ஊருக்கே நீர் வழங்கும் தலித் தொழிலாளி
நாக்பூர்: பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழிலாளி ஒருவர் தனி ஒருவராக கிணறு தோண்டி அதன் தண்ணீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர் அருகேயுள்ள, வாசிம் மாவட்டம் கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. கூலித்தொழிலாளியான இவரது மனைவி சமீபத்தில் அப்பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு நீர் பிடிக்க சென்றார்.

அந்த ஊரில் பிற வகுப்பினர் புழங்கும் கிணற்றில் தலித்துகளை தண்ணீர் பிடிக்க அனுமதிப்பதில்லை. ஆயினும், தான் வழக்கமாக தண்ணீர் எடுக்கும் கிணற்றில் நீர் வற்றிவிட்டதால், பாபுராவ் தஜ்னேவின் மனைவி பொது, கிணற்றில் நீர் பிடிக்க சென்றார்.
ஆனால், பிற உயர் ஜாதியினர், இவரை நீர் பிடிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். வீடு திரும்பிய அவர், நடந்ததை கணவரிடம் கூறி வருத்தப்பட்டார்.
இருப்பினும் பாபுராவ் வருத்தப்படவில்லை. உயர் ஜாதியினருக்கு பதிலடி தர முடிவு செய்து, தனி ஒருவராக தன்னுடைய நிலத்தில் கிணறு தோண்டினார். முதலில், இந்த முயற்சி வேண்டாம் என்று மனைவி தடுத்தார்.
எனினும், விடாமல் முயற்சி செய்து, 40வது நாளில் கிணறை தோண்டி முடித்தார்.
பாபுராவ் தஜ்னேயின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவர் தோண்டியிருந்த அந்த கிணற்றில், நிறைய தண்ணீர் கிடைத்தது. இதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தற்போது அந்த கிணற்று நீரை வைத்து அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அப்பகுதியை சேர்ந்த தலித் மக்களும், உயர் சாதியினரும் பயனடைந்து வருகின்றனர்.
இந்த தகவல் வாசிம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தாசில்தார் கிராந்தி டோம்பி, கோலம்பேஷ்வர் கிராமத்துக்கு சென்று பாபுராவ் தஜ்னேயை சந்தித்தார். மேலும், அவரது இந்த செயலை பாராட்டினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications