ஏபிபி சொல்வதில் உண்மை இருக்கு.. ஆந்திராவில் பாஜக அடி வாங்கும்.. நாயுடு ஒருவரே போதும்!
Recommended Video

திருப்பதி: ஏபிபிடிவி - சிவோட்டர் நேற்று வெளியிட்ட மூட் ஆபி த நேஷன் கருத்துக் கணிப்பில் தென் மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் சரிவு ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது. தென் மாநிலங்களின் எதார்த்தத்தைக் கவனித்தால் அதில் பெருமளவு உண்மை இருக்கும் என்பதை அறியலாம்.
உதாரணத்திற்கு ஆந்திராவை எடுத்துக் கொண்டால் சந்திரபாபு நாயுடு, பாஜக மீது அத்தனை காட்டமாக இருக்கிறார். என்னை குறி வைத்திருக்கிறது பாஜக. ஆனால் பயப்பட மாட்டேன் என்று கோபாவேசம் காட்டி வருகிறார் நாயுடு. ஆந்திராவில் பாஜகவை தோற்கடிப்பதில் மற்றவர்களை விட தெலுங்கு தேசம்தான் அதிக அக்கறை காட்டி வருகிறது.
ஆந்திர மக்களை ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு எதிராக திருப்பும் வேலையிலும் தெலுங்கு தேசம் இறங்கியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்தோ அல்லது சிறப்பு நிதியோ தர பிரதமர் மோடி மறுத்து விட்டதையே தனது முக்கியப் பிரசாரமாக கையில் எடுத்துள்ளது தெலுங்கு தேசம்.
[ஆமாம், வரிசையில்தான் நிற்கிறேன்.. தலைமை பொறுப்பை ஏற்க அல்ல.. உதயநிதி பேச்சு]

தெலுங்கு தேசத்திற்கு எதிராக தாக்குதல்
உண்மையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் பலமுனைத் தாக்குதலை சந்தித்து வருகிறது. பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். கூடவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவும் நாயுடுவைக் குறி வைத்து களம் இறங்கியுள்ளார். இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக நாயுடுவும் கூறி வருகிறார்.

இந்திராவையே எதிர்த்தவன் நான்
நாயுடு கூறுகையில் நான் இந்திரா காந்தியுடன் அரசியல் செய்தவன். இந்திய அரசியலில் இதுவரை மோடியைப் போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. என்னைக் குறி வைத்து செயல்படுகிறது பாஜக. என் மீது பொய் வழக்குகளைப் போட்டு வேட்டையாடத் துடிக்கிறார்கள். ஆனால் நான் பயப்பட மாட்டேன். எத்தனை சதி செய்தாலும் நான் அஞ்ச மாட்டேன்.

காங்கிரஸை விட மோசம்
மாநிலத்தை இரண்டாகப் பிரித்த காங்கிரஸை விட பாஜக மோசமாக உள்ளது. பாஜகவை வீழ்த்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பலமுனைத் திட்டத்தை நாங்கள் தீட்டி வருகிறோம். 2014ல் சிறப்பு அந்தஸ்து தருவதாக உறுதியளித்தது பாஜக. ஆனால் ஆந்திர மக்களுக்குத் துரோகம் செய்து விட்டது என்று கூறியுள்ளார் நாயுடு.

காங்.குடன் கை கோர்ப்பாரா
பாஜகவுக்கு எதிராக முழு வீச்சில் கிளம்பியுள்ள நாயுடு காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கை கோர்ப்பார் என்று தெரிகிறது. மேலும் பாஜகவுக்கு எதிரான சக்திகளை அகில இந்திய அளவிலும் அவர் திரட்டி பாஜகவை முழுமையாக எதிர்ப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை பாஜகவுக்கு ஆதரவான அலை என்று எதுவும் இல்லை. அதேசமயம், நாயுடு என்ற சிறந்த அரசியல்வாதி, பாஜகவுக்கு எதிராக தீவிரமாக இருப்பதால் ஆந்திராவில் பாஜக பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றே பலரும் கூறுகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications