பீகாரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த 5 பேர்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 30 வயது பெண்ணை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 30 வயது பெண் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள தனது சகோதரியை பார்க்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பீகார் வந்தார்.

Woman Allegedly Gang-Raped at District Collectorate in Bihar's Muzaffarpur

முசாபர்பூர் மாவட்ட ரயில் நிலையத்தில் இரவு 8 மணிக்கு வந்திறங்கினார். அப்பபோது மாவட்ட கூடுதல் நீதிபதியின் டிரைவர் நிக்கு பண்டிட் உள்பட 5 பேர் அந்த பெண்ணைஅணுகி அவர் செல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால் அவர்கள் அப்பெண்ணை முசாபர்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அந்த வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் வைத்து அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர் அதிகாலை அங்கிருந்து தப்பியோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் நிக்கு பண்டிட், ஜிதேந்திர பாஸ்வான், விகாஸ் திவாரி, கௌதம் ஜா மற்றும் தீபக் குமார் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் நிக்கு பண்டிட்டை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகிறார்கள்.

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+