33% இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதால்.. ஒவ்வொரு தேர்தலிலும் பலிகடாவாகும் பெண்கள்!
டெல்லி: ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் மட்டும் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று விவாதிக்கப்படும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது. அரசியல் கட்சிகள் நினைத்தால் அதை நிறைவேற்றியிருக்கலாம். ஒவ்வொரு தேர்தலிலும் பெண்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.
ஒரு பெண் ஆளும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 693 பேரில் வெறும் 65 பேர் தான் பெண்கள். கேரள சட்டசபையில் இதுவரை 15 பெண் உறுப்பினர்களுக்கு மேல் இருந்தது இல்லை.
கேரளாவில் உள்ள வாக்காளர்களில் 51.9 சதவீதம் பேர் பெண்களாக இருக்கையில் பெண்கள் பிரிநிதித்துவம் 10 சதவீதம் கூட இல்லை.

ஆணாதிக்கம்
அனைத்து கட்சிகளுமே ஆணாதிக்கம் மிக்கவை. அதனால் தான் பெண்களுக்கு சட்டசபையில் முக்கியத்துவம் இல்லாமல் போகிறது என்று அரசியல் நிபுணரான டாக்டர் சந்தீப் சாஸ்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒன்இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டியும் அளித்துள்ளார்.

தேர்தல்
ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதற்கு காரணம் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆணாதிக்கம் மிக்கவை. அனைத்து கட்சிகளிலும் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு ஆண்கள் அதிகம் உள்ள குழுவாக இருக்கும். இதனால் முக்கிய அரசியல் முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்கு மிகக் மிகக் குறைவு என்கிறார் சாஸ்திரி.

அம்மா, மமதா
சில கட்சிகளுக்கு பெண்கள் தலைவியாக உள்ளனர். உதாரணம் மமதா, சோனியா காந்தி மற்றும் ஜெயலலிதா. ஆனால் அவர்களின் கட்சியிலும் அவர்களால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் உள்ளது. ஒரு கட்சிக்கு பெண் தலைமை தாங்கினாலும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்கள் ஆண்களே என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

பெண்கள்
இந்திய தேர்தலை பொறுத்த வரை பெண்களால் திடமாக இருக்க முடியாது என்பது வெறும் சப்பைக்கட்டு தான். தேர்தலில் பெண்களை அதிக அளவில் நிறுத்தினால் வெற்றி கிடைக்காது என்று கூறுவதில் உண்மை இல்லை என்று சாஸ்திரி கூறியுள்ளார்.

தேர்தல்
ஒவ்வொரு தேர்தலிலும் பெண்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியாது என்று நினைத்தால் அங்கு பெண் வேட்பாளரை நிறுத்துவார்கள். இதன் மூலம் பெண்களை தேர்தலில் நிறுத்தியது போன்றும் ஆகிவிட்டது அவர்களால் வெற்றி பெற முடியாது என்றும் கூறலாம் என்கிறார் சாஸ்திரி.

மசோதா
பெண்களின் இந்த அவல நிலை மாற மசோதா இல்லை மாறாக திடமான மனங்கள் தான் தேவை. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்று அனைத்து கட்சிகளும் சேர்ந்து முடிவு செய்தால் மசோதாவே தேவை இல்லை என்று சாஸ்திரி நம்புகிறார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications