காவிரி நதிநீர் வழக்கு மீண்டும் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது: உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படாது; உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு, நேற்று முதல் தினசரி நடந்து வருகிறது. இன்று கர்நாடக தரப்பில் வாதிடுகையில், "தமிழகம் சாகுபடி பகுதிகளை அதிகரித்ததால் அதிகபடியான நீரை கேட்கிறது. ஒப்பந்தத்தில் உள்ள அளவை விட சாகுபடி பகுதிகளை தமிழகம் அதிகரித்துள்ளது. ஒப்பந்தத்தை மீறுவது தமிழக அரசு தான்" என்று கூறப்பட்டது.

அப்போது, தலையிட்ட நீதிபதிகள், நதி நீர் பிரச்னையில் மாநிலங்கள் சண்டையிட்டு கொள்வதை உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. அனைத்து மாநிலங்களும் இந்தியாவின் அங்கம் தான் என கூறினர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், காவிரி தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரணை நடத்தும். மீண்டும் காவிரி தீர்ப்பாயத்திற்கு அனுப்ப மாட்டோம். நீதிமன்றமே அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும். நடுவர் மன்றத்தில் வைத்த வாதங்களை மீண்டும் வைக்க வேண்டும். வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறினார்.
முன்னதாக உச்சநீதிமன்றத்திற்கு இதை விசாரிக்க அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியிருந்ததையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது. எனவே வழக்கில் இனி தாமதம் ஏற்படாது என தெரிகிறது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்து மூலம் தமிழகத்தின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தனபாலன் கூறியுள்ளார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்












Click it and Unblock the Notifications