சீனாவை வாட்டும் கன மழை... வெள்ளத்தில் சிக்கி 1 லட்சம் பேர் தவிப்பு
சீனாவில் கொட்டி வரும் கனமழையால் ஜிலின் நகரம் வெள்ளத்தில் மூழ்கி, அங்குள்ள 1 லட்சம் பேரின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுஉள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெய்ஜிங்: சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜிலின் நகரத்தில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, அந்த நகரம் முழுவதும் நீரில் மிதக்கிறது. இதனால் அங்குள்ள ஒரு லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் ஜிலின் நகரத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் விட்டுவிட்டுப் பெய்து வரும் கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுவரை வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் ஊடகங்களுக்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஜிலின் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாலைகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது . பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நகரத்தை விட்டு இடம்பெயர வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ஜிலின் நகரின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், சேறு, குப்பைகள், பழுதான பாலங்கள் மற்றும் தொலைத்தொடர்பு, மின் இணைப்புகள் என அனைத்தையும் சரி செய்யும் பணியில் சுமார் 32,360 தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் ஜிலின் நகர அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications