நியூயார்க் அருகே மரத்தில் கொன்று தொங்கவிடப்பட்ட 25 பூனைகள் -சைக்கோ கொலையாளி கைவரிசையா?
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் அருகே 25 பூனைகளை அடித்துக்கொன்று அதை பாலத்தின் பைகளில் அடைத்து மரத்தில் கட்டி தொங்கவிட்ட நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
நியூயார்க் நகரின் அருகேயுள்ள யோன்கர்ஸ் பகுதியில் ஹட்சன் நதி ஓடுகிறது. அதையெட்டினாற்போல மரங்கள் அடர்ந்த காடு உள்ளது. இதில் நியூயார்க் நகர துப்புரவு பணியாளர்கள் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு மரத்தின் கிளைகளில் பல பாலத்தீன் பைகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதை பார்த்து ஏதோ வித்தியாசமாக உள்ளதே என்று அருகில் சென்று பார்த்துள்ளனர். அந்த பேக்குகளை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அதற்குள் பூனைகள் கொன்று வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 25 பேக்குகளில் பூனைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.
உடனடியாக போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மரக்கட்டை, இரும்பு கம்பிகள் கிடந்தது தெரியவந்தது,. மருத்துவ குழுவும் வரவழைக்கப்பட்டு பூனைகளுக்கு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது.
சில பூனைகள் மூன்று வருடங்களுக்கு முன்பே கொல்லப்பட்டிருப்பதும், சில பூனைகள் இரு தினங்களுக்கு முன்புதான் கொல்லப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
பூனைகளின் தலையில் பலமாக தாக்கப்பட்டு அதன் மண்டை எலும்புகள் உடைந்திருப்பதை பார்க்கும்போது இரும்பு கம்பியாலோ அல்லது கட்டையாலோ தாக்கி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பூனையை கொன்று தொங்கவிடும் சமய வழிபாட்டு முறைகள் எதுவும் நியூயார்க் பகுதியில் இல்லை என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். எனவே இது சைக்கோ கொலையாளி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் பூனைகளை கொன்றால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனையும், 5ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications