சவூதியில் 3 போலி ஹஜ் ஏஜென்சிகள் கண்டுபிடிப்பு: 50,000 ரியால் பறிமுதல்
ஜெத்தா: அரபியர்கள், சவூதியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஆசியர்கள் சிலர் நடத்திய 3 போலி ஹஜ் ஏஜென்சிகளை ஜெத்தா போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஹஜ் புனித பயணம் செல்ல மக்களிடம் வாங்கிய 50,000 சவூதி ரியாலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சவூதியில் உள்ள ஜெத்தாவில் அரபியர்கள், சவூதியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஆசியர்கள் சிலர் நடத்தி வந்த 3 போலி ஹஜ் ஏஜென்சிகளை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர்கள் ஹஜ் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நபர் ஒருவருக்கு 4,500 சவூதி ரியால் முதல் 5,500 ரியால் வரை வசூலித்துள்ளனர். அவர்கள் இதுவரை வசூல் செய்திருந்த 50,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சவூதி ஹஜ் துணை அமைச்சர் ஹாதிம் காதி கூறுகையில்,
ஹஜ் புனித பயணம் செய்ய விரும்புபவர்கள் போலியான ஏஜென்சிகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். ஹஜ் துறையிடம் இருந்து முறையான பெர்மிட் பெற்ற ஏஜென்சிகளா என்பதை பார்த்து தான் மக்கள் பணத்தை செலுத்த வேண்டும். பெர்மிட் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். பழைய பெர்மிட் செல்லாது.
அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் ஹஜ் ஏஜென்சிகளை தெரிந்து கொள்ள மக்கள் ஹஜ் அமைச்சக இணையதளத்தை பார்க்கவும். மேலும் 8002444480 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம் என்றார்.
சபா, பவாதி மற்றும் முஷ்ரிபா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட போலி ஹஜ் ஏஜென்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் முஷ்ரிபாவில் இருந்த ஏஜென்சியை 3 ஆசியர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து 5,500 ரியால் வாங்கினர். அவர்களின் ஏஜென்சியில் இருந்த 23,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது. பவாதி ஏஜென்சியை 3 அரபியர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் பயணிகள் ஒவ்வொருவரிடமும் 4,500 ரியால் வீதம் வசூலித்திருந்த 26,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது.
மூன்றாவது ஏஜென்சி சவூதி குடிமக்களால் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் நபர் ஒருவருக்கு 5,000 ரியால் வசூலித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications