சவூதியில் 3 போலி ஹஜ் ஏஜென்சிகள் கண்டுபிடிப்பு: 50,000 ரியால் பறிமுதல்
ஜெத்தா: அரபியர்கள், சவூதியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஆசியர்கள் சிலர் நடத்திய 3 போலி ஹஜ் ஏஜென்சிகளை ஜெத்தா போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஹஜ் புனித பயணம் செல்ல மக்களிடம் வாங்கிய 50,000 சவூதி ரியாலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சவூதியில் உள்ள ஜெத்தாவில் அரபியர்கள், சவூதியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஆசியர்கள் சிலர் நடத்தி வந்த 3 போலி ஹஜ் ஏஜென்சிகளை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர்கள் ஹஜ் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நபர் ஒருவருக்கு 4,500 சவூதி ரியால் முதல் 5,500 ரியால் வரை வசூலித்துள்ளனர். அவர்கள் இதுவரை வசூல் செய்திருந்த 50,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சவூதி ஹஜ் துணை அமைச்சர் ஹாதிம் காதி கூறுகையில்,
ஹஜ் புனித பயணம் செய்ய விரும்புபவர்கள் போலியான ஏஜென்சிகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். ஹஜ் துறையிடம் இருந்து முறையான பெர்மிட் பெற்ற ஏஜென்சிகளா என்பதை பார்த்து தான் மக்கள் பணத்தை செலுத்த வேண்டும். பெர்மிட் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். பழைய பெர்மிட் செல்லாது.
அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் ஹஜ் ஏஜென்சிகளை தெரிந்து கொள்ள மக்கள் ஹஜ் அமைச்சக இணையதளத்தை பார்க்கவும். மேலும் 8002444480 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம் என்றார்.
சபா, பவாதி மற்றும் முஷ்ரிபா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட போலி ஹஜ் ஏஜென்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் முஷ்ரிபாவில் இருந்த ஏஜென்சியை 3 ஆசியர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து 5,500 ரியால் வாங்கினர். அவர்களின் ஏஜென்சியில் இருந்த 23,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது. பவாதி ஏஜென்சியை 3 அரபியர்கள் நடத்தி வந்தனர். அவர்கள் பயணிகள் ஒவ்வொருவரிடமும் 4,500 ரியால் வீதம் வசூலித்திருந்த 26,000 ரியால் பறிமுதல் செய்யப்பட்டது.
மூன்றாவது ஏஜென்சி சவூதி குடிமக்களால் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் நபர் ஒருவருக்கு 5,000 ரியால் வசூலித்துள்ளனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications