சிங்கம், புலி, யானை.. இருக்கு ஆனா இல்லை.. ஹோலோகிராம் முறையில் சர்க்கஸ்..!
ஹோலோகிராம் முறையில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது ரான்கேலி சர்க்கஸ்.
பெர்லின்: விலங்குகளை சித்ரவதை செய்யக்கூடாது என்பதற்காக முதன்முறையாக ஹோலோகிராம் முறையில் சாகசங்கள் நிறைந்த சர்க்கஸை அறிமுகப் படுத்தி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது ரான்கேலி சர்க்கஸ்.
சர்க்கஸில் விலங்குகள் துன்புறுத்தப் படுவதைத் தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்களை கடுமைப் படுத்தியுள்ளன உலக நாடுகள். அதனைத் தொடர்ந்து அனைத்து சர்க்கஸ்களிலும் குதிரை, யானை, சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சர்க்கஸ் தொழில் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. சர்க்கஸ் ரசிகர்களும் இதனால் சோகமடைந்தனர்.
இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியுடன், விலங்குகளைச் சித்ரவதை செய்யாமல், அதே சமயம் சுவாரஸ்யமான சர்க்கஸ் நிகழ்ச்சியை வழங்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது ரான்கேலி சர்க்கஸ்.

எல்லாம் டிஜிட்டல் மயம்:
அதன்படி, ஜெர்மனியில் தனது சர்க்கஸ் நிகழ்ச்சியை ஹோலோகிராம் கூடாரத்திற்குள் முழுதும் டிஜிட்டல் மயமாக்கி ரசிகர்கள் மிரள வைத்துள்ளது ரான்கேலி. பிக் டாப் டென்ட் எனப்படும் இந்த ஹாலோகிராம் கூடாரத்திற்குள் விலங்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கும் டிஜிட்டலில் உருவம் கொடுத்துள்ளது.

ஹோலோகிராம் முறை:
11 ப்ரொஜெக்டர், லேசர்ஸ் மற்றும் ஹோலோகிராம் லென்ஸ்களை பயன்படுத்தி இந்த சர்க்கஸை அவர்கள் நடத்தி வருகின்றனர். இதில், 360 டிகிரி காட்சி அனுபவத்துடன் சர்க்கஸ் சாகசங்களை மக்கள் காண முடியும் என்பது சிறப்பம்சம். மக்கள் இதற்கு அளித்து வரும் ஆதரவைத் தொடர்ந்து இதனை மேலும் விரிவுபடுத்த இந்த சர்க்கஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரான்கேலி சர்க்கஸ்:
உலகப் புகழ்பெற்ற ரான்கேலி சர்க்கஸ் நிறுவனம், 1976 ஆன் ஆண்டில் நிறுவப்பட்டது. சர்க்கஸ் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக இருந்து வந்த இது, தடையைத் தொடர்ந்து மிகுந்த நஷ்டத்தை சந்தித்தது. தற்போது இந்த புதிய முயற்சியால் மீண்டும் சர்க்கஸ் துறையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ரான்கேலி முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முயற்சிகள்:
ரான்கேலியின் இந்த முயற்சியால் மீண்டும் சர்க்கஸ் தொழில் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் பல சர்க்கஸ் நிறுவனங்கள் ஹாலோகிராம் முறையில் சர்க்கஸ் நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications