கென்யா ‘வெஸ்ட் கேட்’ தாக்குதல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
நைரோபி: கென்யாவில் வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் உள்ள 2 தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மதியம் கென்யாவிலுள்ள வணிகவளாகமான வெஸ்ட் கேட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அங்கு பயங்கரத் தாக்குதலை நடத்தியது ஷெபாப் என்ற தீவிரவாத அமைப்பு. இந்த பயங்கரவாதத் தாக்குலில் பலியான 68 பேரில் இருவரும், காயமடைந்த 200 பேரில் 5 பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க யூனியன் படைகளுக்கும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையில் சோமாலிய நாட்டில் நடந்துவரும் போரில் கென்யா தலையிட்டதற்கு பழிவாங்கவே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஷெபாப் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், "வெஸ்ட்கேட்' வணிக வளாகத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் அந்நாட்டு ராணுவத்தினர். நேற்றுஅதிகாலை வணிக வளாகத்தின் உள்ளிருந்து கடுமையான துப்பாக்கி சப்தங்களும், நான்கு வெடியோசைகளும் கேட்ட வண்ணமிருந்தன. இந்த சப்தங்கள் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும், பிறகு படிப்படியாகக் குறைந்துவிட்டதாகவும் நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வளாகத்தில் இருப்பவர்களில், பயங்கரவாதிகள் யார் யாரென்று ராணுவம் இனம் பிரித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனபோதும், இன்னும் ஏராளமான பிணைக்கைதிகள் உள்ளே இருப்பதாகவும், எனவே, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் சிக்கலான பணி என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சோமாலிய பயங்கரவாத அமைப்பான ஷெபாப், கென்யா துருப்புக்கள் பயங்கரவாதிகளை நெருங்க முற்பட்டால், பிணைக்கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
""முஜாஹிதீன்களை நோக்கி நகரும் கிறித்தவர்கள், அவர்கள் செயலுக்கு பிணையக்கைதிகள் விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் தெரிவித்துள்ள ஷெபாப், வளாகத்துக்குள் இருக்கும் பயங்கரவாதிகளுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிணையக் கைதிகளை பத்திரமாக மீட்கும் பணியில், கென்யா பாதுகாப்புப் படையினருடன் இஸ்ரேலிய வீரர்களும், பிரிட்டன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக கென்யா பாதுகாப்பு வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
வணிக வளாகத்திற்குள் சென்ற ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘உள்ளே கிடக்கும் சடலங்களைப் பார்க்கும் போது பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்' என அச்சம் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications