லண்டனில் 'டிராம்' கவிழ்ந்து கோர விபத்து.. 7 பேர் சாவு, 50 பயணிகள் காயம்
தெற்கு லண்டன் அருகே டிராம் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். அதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதால் அங்குள்ள மக்களிடையே இந்நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்: தெற்கு லண்டனில் புதன்கிழமை அதிகாலை டிராம் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த விபத்துக்கு காரணமான டிராம் டிரைவரை சதித்திட்டம் ஏதேனும் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அடிஸ்காம் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தின்போது டிராம் வாகனத்துக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் டிரைவர் அந்த வாகனத்தை இயக்கியதாக ரயில் விபத்து விசாரணைப் பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக்குறித்து துணைத் தலைமைக் காவலர் அட்ரியன் கூறுகையில், இந்த விபத்தின் விளைவாக 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என தெரிவித்தார். விபத்தில் காயம் அடைந்தவர்களில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து புலனாய்வுப்பிரவு போலீசார் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தீர விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் தேரேசா மே மீட்புப் பணிகள் துரிதமாக நடந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். லணடன் மேயர் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்து குறித்து பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications