For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேய் என் பொம்மையை கொடுடா.. ஏய்.. நான் உன் மாப்பிள்ளை.. ருமேனியாவில் ஒரு ஷாக் திருமணம்!

குழந்தை திருமணத்தை ருமேனியா நாடோடிகள் ஊக்குவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ருமேனியாவில் நடந்த ஒரு ஷாக் திருமணம்!-வீடியோ

    புச்சாரெஸ்ட், ருமேனியா: "ஏன் என் பொம்மையை எடுத்தே.. என் பொம்மையை திருப்பி குடு..." என்று அந்த பெண் அழுகிறாள். பொம்மையை பிடுங்கி கொண்டது கல்யாண மாப்பிள்ளை. பொம்மையை தரும்படி அழுதது கல்யாண பொண்ணு!

    ருமானியாவில் க்ரயோவா என்ற இடம் உள்ளது. இங்கு பெற்றவர்களும், உற்றவர்களும், சுற்றமும், சூழ ஒரு கல்யாணம் நடைபெற்றது. மாப்பிள்ளைக்கு 10 வயது, பொண்ணுக்கு 8 வயசு.

    உலகமெங்கும் குழந்தை திருமணத்துக்கு தடை சொல்லப்பட்டுள்ளது. அது சட்டப்படியும் குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்துக்கு எதிரான பிரச்சாரங்களும் நடந்து வருகின்றன. ஆனாலும் இந்த மக்கள் மிக தைரியமாக இந்த கல்யாணத்தை நடத்தி உள்ளனர். குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் ஏன் என்று தெரியவில்லை.

    கண்டு கொள்வதே இல்லை

    கண்டு கொள்வதே இல்லை

    இத்தனைக்கும் இந்த நாட்டில் குழந்தை திருமணத்துக்கு 4 வருஷம் சிறை தண்டனை என்ற அறிவிப்பு உள்ளது. ஆனாலும் தொடர்ந்து இவர்கள் குழந்தைகளை இழுத்து பிடித்து மணமேடையில் உட்கார வைத்து கல்யாணம் செய்து வருகிறார்கள். இது ஒரு நாடோடி கும்பல் என்பதாலோ என்னவோ காவல்துறை, கோர்ட்டு என ஒன்றுகூட இவர்களை எதுவுமே கேட்பதும் கிடையாது.

    வீடியோ வைரல்

    வீடியோ வைரல்

    அந்த கல்யாண மண்டபம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிகிறது. வெட்கமே இல்லாமல் இவர்கள் கல்யாணம் செய்தால், அதற்கு வாழ்த்து கூற குடும்பம் குடும்பமாக வந்து அரங்கத்தில் உட்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். இந்த கல்யாணத்துக்கு அலெக்ஸ் என்ற பாடகர் சென்றிருந்தார். அவர்தான் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    விளையாடிய மாப்பிள்ளை

    விளையாடிய மாப்பிள்ளை

    அந்த வீடியோவில் 10 வயசு மாப்பிள்ளையையும், 8 வயசு பெண்ணையும் மணமேடையில் அலங்காரம் பண்ணி உட்கார வெச்சிட்டாங்க. எதுக்கு உட்கார வெச்சிருக்காங்க என்றே தெரியாமல் இரண்டு குழந்தைகளும் மிரண்டு விழிக்கின்றன. சுற்றி என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் பொம்மையை வெச்சிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க.

    அழுத மணப்பெண்

    அழுத மணப்பெண்

    இதில் பொண்ணு கிட்டஇருந்து பொம்மையை பறிச்சிடவும் அந்த குழந்தை அழ ஆரம்பிக்குது. இப்படி நடந்த இந்த மழலை கல்யாணம் வைரலாகி வருகிது. இதற்கு ஏராளமான கண்டனங்களும் பதியப்பட்டு வருகின்றன. இப்படி உலகத்துக்கே இந்த கல்யாண விஷயம் தெரிந்து விட்டதால் விரைவில் நாடோடி கும்பலை தூக்கி உள்ளே வைக்க போறாங்களாம்.

    English summary
    8 year old girl ‘marries’ boy, 10, at Gypsy Wedding in Romania
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X