நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு!
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு எதிராக அந்நாட்டு மருத்துவர்கள் தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்து ஒன்றும் அது தொடர்பான விவரங்களும் உலகம் முழுக்க தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அணு ஆயுத சோதனை மையம் ஒன்றுக்கு அருகே வெடிவிபத்து ஏற்பட்டது.
ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்த விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பான பல முக்கிய ரகசியங்களை வெளி உலகிடம் இருந்து ரஷ்யா மறைத்து வருகிறது.

இதுவரை தெரிந்தது என்ன
இந்த விபத்து ஒன்றும் அணு ஆயுத சோதனை விபத்து கிடையாது, அணு சக்தி ஆய்வு மையத்தில் ஏற்பட்ட சிறிய விபத்து என்று ரஷ்யா கூறி வருகிறது . ஆனால் அமெரிக்காவோ இது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை ஒன்றில் ஏற்பட்ட விபத்து. ரஷ்யா புத்தம் புதிய அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதை பற்றிய சோதனையில் இந்த விபத்து ஏற்பட்டது என்று அமெரிக்கா கூறி வருகிறது.

இரண்டு பேரும்
ஆனால் இரண்டு நாடுகளும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒன்றாக கருத்து தெரிவித்து வருகிறது. அதன்படி விபத்து ஏற்பட்ட பகுதியில் அதிக அளவில் தற்போது அணு கதிர் வீச்சு இருக்கிறது. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று இரண்டு நாடுகளும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் என்ன
இந்த நிலையில் ரஷ்ய மருத்துவமனைகளில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 20 பேர் வரை அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள்
மருத்துவர்களும், எங்களிடம் அணு ஆயுத விபத்து குறித்து எதுவுமே சொல்லவில்லை. நிறைய பேர் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் எங்களிடம் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இப்போது இல்லை. இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

எப்படி
இந்த விபத்தில் ஏவுகணை எஞ்சினியர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இதை புடின் மக்களிடம் இருந்து மறைக்கிறார் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இதை பற்றி டிரம்ப் இன்னும் வாய் திறக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் உளவுத்துறை இதை தொடர்ந்து விசாரிக்க உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications