நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு!
Recommended Video
மாஸ்கோ: ரஷ்யாவில் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு எதிராக அந்நாட்டு மருத்துவர்கள் தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ரஷ்யாவில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்து ஒன்றும் அது தொடர்பான விவரங்களும் உலகம் முழுக்க தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அணு ஆயுத சோதனை மையம் ஒன்றுக்கு அருகே வெடிவிபத்து ஏற்பட்டது.
ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்த விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. இது தொடர்பான பல முக்கிய ரகசியங்களை வெளி உலகிடம் இருந்து ரஷ்யா மறைத்து வருகிறது.

இதுவரை தெரிந்தது என்ன
இந்த விபத்து ஒன்றும் அணு ஆயுத சோதனை விபத்து கிடையாது, அணு சக்தி ஆய்வு மையத்தில் ஏற்பட்ட சிறிய விபத்து என்று ரஷ்யா கூறி வருகிறது . ஆனால் அமெரிக்காவோ இது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை ஒன்றில் ஏற்பட்ட விபத்து. ரஷ்யா புத்தம் புதிய அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கி உள்ளது. அதை பற்றிய சோதனையில் இந்த விபத்து ஏற்பட்டது என்று அமெரிக்கா கூறி வருகிறது.

இரண்டு பேரும்
ஆனால் இரண்டு நாடுகளும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஒன்றாக கருத்து தெரிவித்து வருகிறது. அதன்படி விபத்து ஏற்பட்ட பகுதியில் அதிக அளவில் தற்போது அணு கதிர் வீச்சு இருக்கிறது. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று இரண்டு நாடுகளும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் என்ன
இந்த நிலையில் ரஷ்ய மருத்துவமனைகளில் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 20 பேர் வரை அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர்கள்
மருத்துவர்களும், எங்களிடம் அணு ஆயுத விபத்து குறித்து எதுவுமே சொல்லவில்லை. நிறைய பேர் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் எங்களிடம் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இப்போது இல்லை. இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

எப்படி
இந்த விபத்தில் ஏவுகணை எஞ்சினியர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். இதை புடின் மக்களிடம் இருந்து மறைக்கிறார் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இதை பற்றி டிரம்ப் இன்னும் வாய் திறக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் உளவுத்துறை இதை தொடர்ந்து விசாரிக்க உள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications